சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் கிட்னி.



கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயால் விரைவில் பாதிக்கப்படும் கிட்னி.

கடந்த வாரம் 11 ஆண்டுகளாக சர்க்கரைநோய் உள்ள 59 வயதான ஒருவர் கால்வீக்கம் முகவீக்கம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் வந்தார். முழு உடல் பரிசோதனை செய்து பார்த்தபோது அவரின் இரு கிட்னிகளும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
“நான் அவ்வப்போது சர்க்கரை பரிசோதனை செய்து கொள்கிறேன். உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறேன்,தினமும் வாக்கிங் செல்கிறேன். என்றாலும் நோய் குறைய மாட்டீங்கிறதே டாக்டர்..”
ஆனால் பல ஆண்டுகள் சர்க்கரை அவர் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் உண்மை.பல ஆண்டுகளாக ஒரே மாத்திரையை சாப்பிட்டதால் இவருக்கு மாத்திரை கேட்க வில்லை. ஆரம்பத்திலேயே “மைக்ரோ ஆல்புமின்” பரிசேசாதனை செய்து இருந்தால் ஜந்து ஆண்டுகளுக்கு முன்பே சிறுநீரக பாதிப்பை சரிசெய்திருக்கமுடியும்.
ஆரம்பக்கட்டத்தி;;ல் சர்க்கரை நோயின்; பின்விளைவுகள், அறிகுறிகள் இல்லாததால் தெரிவதில்லை.
ஓவ்வொரு சிறுநீரகத்தலும் சுமார் 10 லட்சம் நெப்ரான்கள் எனும் சிறுநீரக அலகுகள் காணப்படும். இதில் மெல்லிய இரத்தக்குழாய்களும் வடிகட்டும் சவ்வும் காணப்படும். இவற்றின் வழியாக இரத்தம் செல்லும் போது அவை இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வடிகட்டி சிறுநீருக்கு அனுப்பும்.சர்க்கரை நோய் இந்த மென்மையான அமைப்பை பாதித்து நீங்கள் அறிகுறிகளை உணரும் முன்னரே அவற்றைச் சீர்குலைத்தும் விடும்.சர்க்கரை நோய் உள்ளவர்களில் 30 சதம் பேர் இறுதியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இழக்கும் நிலையை அடைகிறார்கள்.சர்க்கரை நோய் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்கான பரிசோதனையை தாமதப்படுத்தினால் உடலின் முக்கிய உறுப்புகளை இழக்க வேண்டிய சோக நிலைமையும் ஏற்படலாம்.
சர்க்கரைநோய் சிகிச்சை என்பது ஒரு கூட்டுச் சிகிச்சைதான். உணவுமுறை, உடற்பயிற்சி. பொருத்தமான மருந்து மாத்திரைகள், பரிசோதனைகள், விழிப்புணர்வு இவை அனைத்தும் இருந்தால்தான் பின்விளைவுகளை தடுக்கமுடியும்.


கட்டுப்படுத்தப்படாத சர்க்கரைநோய் படிப்;படியாக இரத்தக் குழாயில் அடைகிறது.சிறிய இரத்தக்குழாய் அடைப்பினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துக் கொள்வதினால் பக்கவிளைவுகளை முன்கூட்டியே தடுக்கமுடியும். முக வீக்கம், கால் வீக்கம், வாந்தி., சிறுநீரில் புரதம் ஒழுகுதல், அதிக இரத்த அழுத்தம், சோர்வு, அசதி, தலைசுற்றல், சிறுநீர் மிக குறைவாக வெளிப்படுதல் ஆகியவை சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்.ஜந்து ஆண்டுகளுக்கு முன்பே “மைக்ரோ ஆல்புமின்” பரிசோதனை செய்துக் கொள்வதின் மூலம் சிறுநீரில் புரதம் ஒழுகுதலை தெரிந்துக் கொண்டு சிறுநீரக கோளாரை முன்கூட்டியே தடுக்கமுடியும்.

கிட்னி பாதிப்பை தடுக்க சில வழிமுறைகள்.

1.      சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
2.      இரத்த அழுத்தத்தை பி.பி.130ஃ30 க்கு கீழ் வைத்திருக்க வேண்டும்.
3.      உணவில் உப்பை குறைக்க வேண்டும்.
4.      ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும்.
5.      அசைவ உணவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் ஒரு உறுப்பில் அல்லது இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால்,மற்ற உறுப்புகளிலும் அடைப்பு இருக்கலாம்.சிறிய இரத்தக் குழாய் அடைப்பினால், கண் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. பெரிய இரத்தக்குழாய் அடைப்பினால் இருதயம்,மூளை,கால் போன்றவை பாதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment