சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள்:



சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள்:
கண்களும் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து தப்புவதில்லை.இடையிலே வந்த இந்த கொடிய நோயினால் பார்வை பறி போவது என்பது எவ்வளவு துயரம்?
சரி என்ன காரணம்? சொல்லாமல் கொல்லும் சர்க்;கரை எப்படி கண் பார்வையை பறிக்கிறது?
நமது கண்களின் உட்புறம் இறுதியில் உள்ள விழித்திரைக்குள் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் சந்திக்கின்;றன.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது முதலில் பாதிக்கப்படும் இரத்தக் குழாய்கள் இவையே. இதனையே விழித்திரை வலுவிழப்பு(சநவinழியவால) என்பார்கள். சர்க்கரை நோய் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு பலருக்கு லேசான பார்வை கோளாறுகளும்,சிலருக்கு கடும் பாதிப்பாக பார்வையிழப்பு கூட ஏற்படலாம்.
சுர்க்கரை நோயினால் குறைவான அளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை நாளங்கள் வலுவிழந்து வீங்கிப் பெருத்து அல்லது கொழுப்புப் படிவுகளுடன் காணப்படுகிறது.இதுவே மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு,விழித்திரையில் உள்ள அமல்லிய நாளங்கள் பாதிப்படைந்து அவற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பின் அடைபடும்.உறுதியற்ற புதிய இரத்த நாளங்கள்  விழித்திரையில் உண்டாகும்.அவையும் எளிதில் உடைந்து இரத்தக்கசிவு ஏற்படும்.இரத்தக்கசிவு அதிகமானாலும்,விழித்திரையின் முக்கியப் பாகங்களில் ஏற்பட்டாலும் பார்வையிழப்பு ஏற்படும்.புதிய இரத்த நாளங்களில் தழும்புத் திசுக்கள் ஏற்;பட்டு அவை விழித்திரையை இழுத்தோ விலக்கியோ பார்வைக் குறைவை ஏற்படுத்தலாம்.
சரி இதற்கு என்ன தீர்வு..?
முறையாக சர்க்;கரை பரிசோதனை மட்டுமல்லாமல்,கண் பரிசோதனையையும் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதற்கு முன்னர் ஆரம்ப கட்டடத்திலேயே கண்டறிய முடியும்.கசியும் இரத்தக் குழாய்களை லேசர் சிகிச்சை மூலம் உறைய வைக்க முடியும்.
தழும்புததிசுக்களால் விழித்திரை விலகல் ஏற்படும் போது,அறுவை சிகிச்சை செய்து மீண்டும் விழித்திரையை ஒட்ட வைக்க முடியும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் கிட்னி.



கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயால் விரைவில் பாதிக்கப்படும் கிட்னி.

கடந்த வாரம் 11 ஆண்டுகளாக சர்க்கரைநோய் உள்ள 59 வயதான ஒருவர் கால்வீக்கம் முகவீக்கம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் வந்தார். முழு உடல் பரிசோதனை செய்து பார்த்தபோது அவரின் இரு கிட்னிகளும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
“நான் அவ்வப்போது சர்க்கரை பரிசோதனை செய்து கொள்கிறேன். உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறேன்,தினமும் வாக்கிங் செல்கிறேன். என்றாலும் நோய் குறைய மாட்டீங்கிறதே டாக்டர்..”
ஆனால் பல ஆண்டுகள் சர்க்கரை அவர் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் உண்மை.பல ஆண்டுகளாக ஒரே மாத்திரையை சாப்பிட்டதால் இவருக்கு மாத்திரை கேட்க வில்லை. ஆரம்பத்திலேயே “மைக்ரோ ஆல்புமின்” பரிசேசாதனை செய்து இருந்தால் ஜந்து ஆண்டுகளுக்கு முன்பே சிறுநீரக பாதிப்பை சரிசெய்திருக்கமுடியும்.
ஆரம்பக்கட்டத்தி;;ல் சர்க்கரை நோயின்; பின்விளைவுகள், அறிகுறிகள் இல்லாததால் தெரிவதில்லை.
ஓவ்வொரு சிறுநீரகத்தலும் சுமார் 10 லட்சம் நெப்ரான்கள் எனும் சிறுநீரக அலகுகள் காணப்படும். இதில் மெல்லிய இரத்தக்குழாய்களும் வடிகட்டும் சவ்வும் காணப்படும். இவற்றின் வழியாக இரத்தம் செல்லும் போது அவை இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வடிகட்டி சிறுநீருக்கு அனுப்பும்.சர்க்கரை நோய் இந்த மென்மையான அமைப்பை பாதித்து நீங்கள் அறிகுறிகளை உணரும் முன்னரே அவற்றைச் சீர்குலைத்தும் விடும்.சர்க்கரை நோய் உள்ளவர்களில் 30 சதம் பேர் இறுதியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இழக்கும் நிலையை அடைகிறார்கள்.சர்க்கரை நோய் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்கான பரிசோதனையை தாமதப்படுத்தினால் உடலின் முக்கிய உறுப்புகளை இழக்க வேண்டிய சோக நிலைமையும் ஏற்படலாம்.
சர்க்கரைநோய் சிகிச்சை என்பது ஒரு கூட்டுச் சிகிச்சைதான். உணவுமுறை, உடற்பயிற்சி. பொருத்தமான மருந்து மாத்திரைகள், பரிசோதனைகள், விழிப்புணர்வு இவை அனைத்தும் இருந்தால்தான் பின்விளைவுகளை தடுக்கமுடியும்.


கட்டுப்படுத்தப்படாத சர்க்கரைநோய் படிப்;படியாக இரத்தக் குழாயில் அடைகிறது.சிறிய இரத்தக்குழாய் அடைப்பினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துக் கொள்வதினால் பக்கவிளைவுகளை முன்கூட்டியே தடுக்கமுடியும். முக வீக்கம், கால் வீக்கம், வாந்தி., சிறுநீரில் புரதம் ஒழுகுதல், அதிக இரத்த அழுத்தம், சோர்வு, அசதி, தலைசுற்றல், சிறுநீர் மிக குறைவாக வெளிப்படுதல் ஆகியவை சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்.ஜந்து ஆண்டுகளுக்கு முன்பே “மைக்ரோ ஆல்புமின்” பரிசோதனை செய்துக் கொள்வதின் மூலம் சிறுநீரில் புரதம் ஒழுகுதலை தெரிந்துக் கொண்டு சிறுநீரக கோளாரை முன்கூட்டியே தடுக்கமுடியும்.

கிட்னி பாதிப்பை தடுக்க சில வழிமுறைகள்.

1.      சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
2.      இரத்த அழுத்தத்தை பி.பி.130ஃ30 க்கு கீழ் வைத்திருக்க வேண்டும்.
3.      உணவில் உப்பை குறைக்க வேண்டும்.
4.      ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும்.
5.      அசைவ உணவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் ஒரு உறுப்பில் அல்லது இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால்,மற்ற உறுப்புகளிலும் அடைப்பு இருக்கலாம்.சிறிய இரத்தக் குழாய் அடைப்பினால், கண் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. பெரிய இரத்தக்குழாய் அடைப்பினால் இருதயம்,மூளை,கால் போன்றவை பாதிக்கப்படுகிறது.

உணவு பழக்கம்


 சமுதாயத்தின் உணவு பழக்கம் மாற வேண்டும்
தானிய உணவை குறைத்தால் மட்டுமே சர்க்கரை நோயை வெல்ல முடியும்;.
சர்க்கரை என்று நாம் குறிப்பிடுவது அனிப்பான சீனி, அஸ்கா,சர்க்கரை அல்ல.கார்போஹைட்ரேட் என்று சொல்லக் கூடிய மாவுச்சத்து தான், உதாரணம்: இட்லி,தோசை,சப்பாத்தி போன்றவற்றில் இருக்கும் தானியங்களான அரிசி,ராகி,கோதுமை,கம்பு,சோளம் இவற்றில் உள்;ள மாவுச்சத்தை தான் நாம் சர்க்கரை என்று கூறுகிறோம்,இந்த மாவுச்சத்துதான் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.
தனியாக தானிய உணவு எதை சாப்பிட்டாலும் சர்க்கரையாக மாறும்.தானிய உணவு ஜீரணமாகி சக்தியாகி  மாறவும் இன்சுலின் அவசியம்.தானியம் மட்டும் சாப்பிட்டால் இன்சுலின்  அதிகமாக சுரககும். சர்க்கரை அதிகமாகும்.வேகமாக ஜீரணமாகும் உணவுகளான கஞ்சி,களி,கோதுமை தோசை போன்றவை சர்க்கரையை இரத்தத்தில் மிக வேகமாக அதிகப்படுத்தும்.மூன்று வேளையும் தானியமாக  சாப்பட்டால் சர்க்கரை அதிகமாகும்.
உதாரணத்திற்கு, இந்தியாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் தானிய உணவை அதிகமாக சாப்பிடுகிறோம்.சர்க்கரை இல்லாதவர்கள் கூட தானியங்களை அதிகமாக சாப்பிடும் போது இன்சுலின் சுரப்பும்,இன்சுலின் தேவையும் அதிகமாகும்.எதிர்காலத்தில் சர்க்கரை வரும் வாய்ப்பு உன்னது. இப்Nபுhது உள்ள தானிய உணவை 3 ல் ஒரு பங்கு குறைத்து பருப்பு,பயறு,பழங்கள்,காய்கறிகள் சாப்பிட வேண்டும்.
இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்த சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒய்வில் சிறிது மாற்றம் செய்தாலே போதும்..
இதுவரைக்கும் நம் வீட்டு இட்லிக்கு,மாவரைக்கும் போது,அரிசி அதிகமாகவும்,உளுந்து குறைவாகவும் போட்டிருப்போம்.இனிமேல் மாவு ஆட்டும் போது உளுந்து வெந்தயம் அதிகப்படுத்தி அரிசியை குறைக்கவும்.
சப்பாத்தியில் இனி கோதுமை அளவைக் குறைத்து பருப்பு அல்லது சோயா மாவு சேர்ககவும்.
பொங்கள் செய்யும் போது பாசி பருப்பை அதிகப்படுத்தி,அரிசியைக் குறைக்கவும்.
மதியம் நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் சாதத்தை குறைத்து பருப்பு காய்கறி அதிகம் சேர்த்து சாப்பிடவும்.

நீரிழிவு நோயாளர்கள் இனிப்பும் சாப்பிடலாமா??



நீரிழிவு நோயாளர்கள் இனிப்பும் சாப்பிடலாமா??

“எனக்கு சக்கரை வியாதி
கூடி விட்டது
நீ தந்த முத்தங்களால்!”- இந்த கவிதையை எங்கேயோ படித்த ஞாபகம்..
எனக்கு தெரிந்தவரை காதலியின் முத்தத்தால் சர்க்கரை கூடுமா? இல்லையா என்று தெரியாது.ஆனால் மனைவியின் திட்டமிடாத  சமையலால் கண்டிப்பாகக் கூடும்.
இதே போல் இன்னொரு சம்பவம் எனது மருத்துவமனையில் நடந்தது.
நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் அவர். என்னிடம் தான் அடிக்கடி வந்து செக்கப் செய்துக் கொள்வார்.
“மேடம்..இந்த நாக்கு இருக்கே..அது செத்துப்போய் கிட்டத்தட்ட 35 வருசம் ஆயிடுச்சு”
ஏன் சார்..என்னாச்சு..?
“சாப்பாடுன்னாவே எனக்கு பிடிக்க மாட்டீங்குது.. மேடம்..ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகி 35 வருசம் ஆகுது.”
இவ்வளவு காலமும் அவளின் சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு  சாப்பாடே வெறுத்துப் போனவர் அவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
உண்மையில் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நமது மனைவியே நமக்கு சர்க்கரை நோயை அன்பு பரிசாகத்; தருகிறாள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதற்காக உங்கள் மனைவியை கோபித்து பயனில்லை…உணவை பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் படித்தவர்களுக்கே இல்லை என்பதுதான் உண்மை.
எண்ணெய் இல்லாமல் நாம் எந்த உணவையும் சமைப்பதில்லை. ஆனால் இந்த எண்ணைய்க்கு கொடூராமான இன்னொரு முகமிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
பிரியாணி சமைத்த பாத்திரத்தையே எவ்வளவு கஸ்டப்பட்டு,எல்லாரையும் திட்டி தீர்த்து கழுவுறோம்..அப்பவும் அந்த எண்ணெய் பசை போவதில்லை..அப்படியென்றால் நம் உடம்பிற்குள் போன எண்ணெய் பசையை எப்படி தேய்த்துக் கழுவுவது? யோசிக்கறீர்களா?
“ஆயிலை குறைத்தால் நம் ஆயுள் கூடும்” என்பது தான் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது.
சரி.. என்ன டாக்டர் சாப்பிடலாம் ன்னு தானே கேக்கறீங்க?...
கண்டிப்பா அதையும் நான் தானே சொல்லியாகணும்…சொல்றேன்..தற்போதைய வாழ்க்கை முறைக்கேற்ற(உடலுழைப்பின்றி வாழ்வது) உணவை நாம் கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஏனென்றால்; இப்Nபுhது சாப்பிடுகின்ற உணவையே நாமும் தொடர்ந்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் சர்க்கரை வாழும் கூடாரமாக நம் உடல் மாறிவிடும்.ஆகவே கீழ்கண்ட உணவு முறைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவோம்..நமது குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்துவோம்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

காய்கறிகள்
சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் குறைந்த கலோரியில் அதிக சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் காய்கறிகளுக்கு உண்டு. காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக வைட்டமின் சி, கால்சியம், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம், காய்கறிகளில் உள்ளதால் அவை உடலுக்கு வலுவைத் தரக்கூடியவை.
சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்கள் தினமும் அதிகபட்சம் 400 கிராம் அளவுக்கு காய்கறிகள் சாப்பிட வேண்டும். காய்களில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைப் போக்குகிறது. உணவு இடைவேளைகளில் பசியெடுத்தால் பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். தோல் நீக்காமல் நன்கு நீரில் சுத்தம் செய்து அவைகளை சாப்பிட்டால் அவற்றின் ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்
கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம். காய்கறிகளில் காரட், பீட்ரூட், பட்டாணி, ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தலாம். உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. நன்கு கடைந்த மோரில் நீர் பெருக்கி அருந்தலாம். சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். மிளகு ரசம் மிகவும் நல்லது.
வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளை முள்ளங்கி, குடைமிளகாய் இவைகளை சாலட்டாக சாப்பிடலாம்.
நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.
கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்
சாத்துக்குடி        1
ஆரஞ்சு                2
ஆப்பிள் (தோலுடன்) 1
கொய்யா (சிறியது)  2
பேரிக்காய் (சிறியது) 2
வெள்ளரிக்காய்           2
அன்னாசிப்பழம     4 வளையங்கள்
தர்பூசணி         1 துண்டு

மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.
சாப்பி;டக்கூடாத பழங்கள்
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, திராட்சை, சீதாப்பழம், இந்த பழங்களில் மாவுச்சத்தும், கலோரியும், சர்க்கரையை உயர்த்தும் திறனும் அதிகம் என்பதால், சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


பழங்களிலுள்ள நார்சத்தின் பயன்கள்
நார்ச்சத்து சர்க்கரை விரைவாக உயர்வதை தடுக்கிறது
மலச்சிக்கலை தடுக்கிறது
பசியை கட்டுப்படுத்துகிறது
வயிறு நிறைவு ஏற்படுகிறது
மலச்சிக்கலும் வாழைப்பழமும்:
வாழைப்பழம்  மலச்சிக்கலுக்கு நல்லது என்று பலர் சாப்பிடுகின்றனர்.ஆனால் இதில் மாவுச்சத்தும் சர்க்கரையை உயர்த்தும் திறனும் அதிகம்.அதற்கு பதில் பப்பாளி மற்றும் கொய்யாப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கலை தடுக்கும்,நார் சத்தும் அதிகம்.
அசைவ உணவு பிரியர்களுக்கு
முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிடுவது நல்லது. அதுபோல் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் மூலம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக கிடைக்கிறது. இது உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது. மருத்துவரின் ஆலோசனைப்படி வாரம் இருமுறை 100 முதல் 200 கிராம் வரை மீன் சாப்பிடலாம். அசைவ உணவில் ஆட்டிறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி இவற்றை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் வகைகள்
உணவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிடு எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன் படுத்தலாம். ஆனால் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் வகையில் நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரையுள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?
குடிக்கக் கூடாது.காரணம் சர்க்கரையை உயர்த்தும் திறன் ஜூஸ்க்கு அதிகம்.நார்சத்து இல்லை.அதிலுள்ள வைட்டமின்கள் வீணாக்கப்படுகின்றன.


உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால்.
வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.
எலுமிச்சை சாறு     200 மி.லி.
வாழைத்தண்டு சூப்   200 மி.லி.
அருகம்புல் சூப்     200 மி.லி.
நெல்லிக்காய் சாறு   100 மி.லி
கொத்தமல்லி சூப்   100 மி.லி.
கறிவேப்பிலை சூப்   100 மி.லி.
இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

மன அழுத்தமும் சர்க்கரை நோயும்



மன அழுத்தமும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணியே..

இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறு வயது முதலே அதிகரித்துவரும் மன அழுத்தமும் சர்க்கரை நோயை தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய இளைஞர்களில் பலர் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உடல் வளைந்து வேலை செய்வதில் அவர்களுக்கு நாட்டமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே எவரெஸ்ட் உச்சி வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் இரவு பகல் பாராமல் கணிப்பொறியின் முன்னாலேயே வாழக்கையை ஒட்டுகிறார்கள். சூரியன் முளைத்த பிறகு தூங்கி, மறைந்த பிறகு விழிக்கிறார்கள். இதனால் உறக்கம் கெடுகிறது. உடலின் சகஜ நிலை மாறுதல் அடைகிறது. மன அழுத்தம் அதிகக்கிறது. கடிதம் போடாமலேயே சக்கரை நோய் வந்து உடலோடு ஒட்டிக்கொள்கிறது.
மருத்துவ ரீதியில் சக்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மன அழுத்தம் என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது, உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் எனது நண்பர் ஒருவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. அவரின் முன்னோர்களுக்கோ. அவர் குடும்பத்தில் மற்றவருக்கோ சக்கரை நோயே கிடையாது. ஆனால் அவருக்கு அது வந்து பெரும் தொல்லை தருகிறது. இதற்கு அதிகபடியான மன அழுத்தமே அவருக்கு வந்த நோய்க்கு காரணம்.
அவருக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் என்ற எந்த பிரச்சனையும் இல்லை. அவர் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும் என்ற கடமைகளும் இல்லை. உண்பதற்கு சோறும், உடுப்பதற்கு ஒரு முழு துணியும் இருந்தாலே அவர் தேவைகள் பூர்த்தியாகி விடும்.

பிறகு எங்கிருந்து வந்தது அவருக்கு மன அழுத்தம?;,
இரண்டாயிரம் ஆண்டு துவக்கத்தில் ஒரு சொந்த வேலையின் காரணமாக பல லட்ச ரூபாய் கடன் அவர் தலை மீது விழுந்தது. நம்பிக்கை நாணயம் கெடாமல் 2006-க்குள் அதை அடைத்து முடிப்பதற்கு அவர்; அனுபவித்த கஸ்டங்களை வெறும் வார்த்தைகளால் எழுதி விட முடியாது. கடன். வறுமை என்பவைகளின் முழுமையான அர்த்தம் அவருக்கு அப்போது தான் தெரிந்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட மன அழுத்தமே அவர்; உடலில் பல நோய்களை உண்டாக்கியது அல்லது வரவழைத்தது.

அவர்; அனுபவித்த கஸ்டங்களை விட பல மடங்கு கஸ்டங்களையும் மன உளைச்சலையும் இன்றைய இளைஞர்கள் ஒவ்வொரு மணி நேரமும் அனுபவிக்கிறார்கள் என்பது யதார்த்தமாகும். குருவி தலையில் பனங்காயை வைத்தது போல வயதாலும் அனுபவமின்மையாலும் நமது இளம் தலைமுறையினர் சுமைகளை சுமக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். இதன் விளைவாக அவர்களின் மனமும், உடலும் பாதிப்படைகிறது. இது மட்டுமலல நாகரீகம் என்ற போர்வையில் நமது தேச பருவகாலத்திற்கு ஒத்து வராத பழக்க வழக்கங்களையும் உணவு முறைகளையும் ஏற்படுத்தி கொண்டும் அவதிப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பல நோய்களில் மிக முக்கியமானது சக்கரை நோய்.
உட்கார்ந்த இடத்திலேயே அதிகநேரம் இருப்பதாலும் உடல் அசைவுகளை இயற்கைக்கு மாறாக அடக்கி வைப்பதனாலும் உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு இல்லாததினாலும் இதய பலகீனத்தாலும் இளம் வயதினருக்கு சர்க்கரை நோய் என்கின்ற இனிப்பு வியாதி சொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.ஆகவே இதிலிருந்து மீள்வதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அதை நம் இளைஞர்கள் கடைபிடிப்பது நல்லது.

கால்கள் கவனம்



கால்களை கவனமுடன் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும்
1.பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராயுங்கள்.உங்களால் அடிபாகத்தை பார்க்க முடியவில்லை என்றால்,கண்ணாடியையோ,மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள்.
2. கால்களை சுத்தமாகவும்,உலர்ந்த நிலையிலும் வைத்திருங்கள்.வெதுவெதுப்பான நீரில் தினமும் கால்களை கழுவுங்கள்.விரல் இடுக்குகளில் கரபெரள வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
3. சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதக்கப்படுவதால் வியர்ப்பது குறைந்து தோல் வறண்டுவிடும்,வறண்ட தோலில் அரிப்பு,வெடிப்பு ஏற்பட்டுத் தொற்று ஏற்படலாம்,எனவே தோல் வறண்ட நிலை ஏற்பட்டால் அதனை ஈரப்படுத்துங்கள்.
4. இரத்த ஓட்டம் ஒழுங்காக நடைபெற உட்காரும் போது கால்களைத் தூக்கி வையுங்கள்.மேலும் கணுக்கால்களையும் விரல்களையும் அசைத்துக் கொண்டீட இருக்கவும்.இறுக்கமான காலுறைகளை அணிய வேண்டாம். கால் மேல் கால் போட்டு அமருவதை தவிர்க்கவும்.
5. வியர்வையை உறிஞ்சும் பருத்தியினாலான காலுறைகளையே தேர்ந்தெடுத்து அணியவும்.நைலான் வகைகளை தவிர்க்கவும்.ரப்பர் மற்றும் எலாஸ்டிக் வளையங்கள் உள்ளவற்றை தவிர்க்கவும்.சரியாக பொருந்தாத காலுறைகள் தோலில் உரசிக் காயங்கள் ஏற்படுத்துமாதலால் அதனையும் தவிர்க்கவும்.
6. கால் நகங்களை வெட்டும் போது மிகவும் கவனமாக இருக்கவும்.உங்கள் விரல் நுனி வரை உள்ளவாறு பார்த்துநகங்களை வெட்டவும்.ஓரங்களழல் உள்ள கூர்மையான பகுதயைத் தேய்த்து மழுங்கச் செய்யவும்.உங்கள் விரல் நகங்களைச் சுற்றித் தோல் சிவந்து காணப்பட்டால் உடனே உங்கள் மருத்துவரிடம் காட்டவும்.
7.வெயில் காலங்களில் சூட்டுக் கொப்புளங்கள் ஏற்படாத வகையில் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள்.வீட்டிரும் கூட சாதாரணக் காலணிகளுடன் இருக்கபே நல்லது.
சில பேர் காலணிகளை அதிக விலைக் கொடுத்து வாங்குவார்கள்.அந்த காலணிகள் அவர்களின் காலுக்கு அணியாக இல்லாமல் விலங்காகவும் மாறி விடுகிறது.காலணிகள் கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும் அது நமக்கு வசதியாகவும் இருக்க வேண்டும்.சில காலணிகள் கால்களை இறுக்கி பிடித்தபடி இருக்கும்.நடக்கிற போது காலில் உரசி உரசி சின்ன சின்ன புண்களை ஏற்படுத்தும்.ஆகவே சர்க்கரை நோயாளிகள் செருப்புகளை வாங்கும் போது தன் காலுக்கேற்ற பாதிப்பில்லாத வசதியானதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல செருப்பு எப்படி இருக்க வேண்டும்?
மென்மையான தோலினால் மேற்பகுதியைக் கொண்டிருப்பவை நல்ல காற்றோட்டத்தை தரும்.நல்ல காற்றோடடம் வியர்வையைக் குறைத்து தோல் பிரச்சினைகள்  ஏற்படாது தடுக்கும்.
விரல் நுனி மூடும் படி உள்ளவை விரல்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
குதிகால் உயரமற்ற செருப்புகள் கால்களை பாதுகாப்பதுடன், கால்களுக்கு தொந்திரவு செய்யாதவை.
வளையும் தன்மையுள்ள அடிப்பகுதி உள்ள செருப்புகள், அதிர்வை எளிதில் உள் வாங்கிக் கொள்வதால் காலில் பாதிப்புகள் வர வாய்ப்புகள் குறைகிறது.ஆனால் இவை வழுக்கும் தன்மை கொண்டவையாக இருக்கக்கூடாது.
உங்கள் காலணி உங்களுக்குப் பொருந்துகிறதா?
புதிய செருப்புகள் வாங்கும் போது கீழ்க்கண்டவற்றைக் கவனிக்கவும்.
செருப்பின் நுனிப்பகுதி உங்கள் நீளமான விரல்களை விட கால் அங்குலம் நீளமாக இருக்க வேண்டும்.காலணியின் நுனிப்பகுதி நன்கு விரிந்து விரல்களை அழுத்தாவண்ணம் இருக்க காலணிகளையும் அணிந்து நடந்து பார்த்து வாங்கவும்.
முடிந்த வரை மாலை நேரத்திலேயே காலணிகள் வாங்கவும்.மாலை நேரத்தில் காலகள் சற்று வீங்கிப் பெரிதாக இருப்பதால் காலையில் வாங்கும் காலணிகள் பொருந்தாமல் போகும்.எனவே மாலையிலேயே காலணிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஒரு காலை விட மற்றொரு கால் பெரிதாக இருந்தால் பெரிய காலுக்கு ஏற்ற காலணிகளையே வாங்கவும்.
கால்களில் உணர்வுக் குறைவு காணப்பட்டால் வீட்டிற்குச் சென்றதும் 30 நிமிடம் காலணிகளை அணியவும்.பின்னர் அவற்றைக் கழற்றிக் கால்களைப் பரிசோதிக்கவும்.கால்கள் சிவந்து காணப்பட்டால் காலணி பொருந்தவில்லை என்று அர்த்தம்.அப்படியாயின் காலணியைக. மாற்றி விடவும்.

சர்க்கரை நோய் பாலுணர்வை பாதிக்குமா?



சர்க்;கரை நோய் பாலுணர்வை பாதிக்குமா?

பெண்களை ஓரளவு பாதிக்கும். ஆண்களுக்குத்தான் பாதிப்பின் அளவு அதிகரிக்கும். காரணம், உறுப்பு விரைப்பின்மை போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
சர்க்;கரை நோயுள்ள பெண்கள் தாராளமாக கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் கர்ப்பம் தரிக்கவேண்டும். குறிப்பாக இன்சுலினை உபயோகிக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். காரணம், அதிக அளவு இன்சுலின் கருவையும் பாதிக்கக்கூடும். நாட்பட்ட நீரிழிவுக்காக பொதுவாக மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்கள் வேண்டுமானால் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்கள் கர்ப்பத்தைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்;கரை நோயுள்ள பெண்களுக்கு முதல் மாதவிலக்கு ஓரிரு ஆண்டுகள் தள்ளிப் போகலாம். அடுத்தடுத்து ஏற்படும் மாத விலக்கு ஒழுங்கின்றி காணப்படும். பெரும்பாலும் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குத்தான் பிரச்சினை. சர்க்;கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் எந்தத் தொல்லையும் வராது.
பொதுவாக ஆண்மை என்பதை பாலுறவு விசயத்தில் ஆணுறுப்பு விரைப்பதைக் குறிக்கிறார்கள். ஆணுறுப்பில் மூன்று நீள்வட்ட சிலிண்டர் போன்ற வடிவில் மென்மையான திசுக்கள் உள்ளன. பாலுணர்வுத் தூண்டுதலின்போது இவைகளுக்குத் தமனிகள் மூலமாக அதிக இரத்தம் பாய்கிறது. இதனால் பஞ்சுத் திசுக்கள் பெரிதாக உப்பி பல மடங்கு பெரிதாகிறது. நாட்பட்ட நீரிழிவுக்காரர்களுக்கு இந்தத் தமனியில் அழற்சி ஏற்படுவதால் சரியான ரத்த ஓட்டம் பாய்வதில்லை, இதனால் அதன் எழுச்சியும் குறைகிறது. தொய்வு ஏற்படுகிறது.
சர்க்;கரை நோயுள்ளவர்கள் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். பெரும்பாலான சர்க்;கரை நோய்கள் சுமார் முப்பத்தைந்து முதல் நாற்பது வயது வாக்கில்தான் வருகின்றன. இது இவர்களின் திருமண வாழ்க்கையை அல்லது குழந்தைப் பேற்றை பாதிப்பதில்லை. இவர்களில் ஐம்பது விழுக்காட்டினர் ஐம்பது முதல் ஐம்பத்தைந்து வயது வாக்கில்தான் பாலுறவுப் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
சக்கரை நோயானது நாளமில்லா சுரபிகளை பாதித்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைந்து உடலுறவில் நாட்டமில்லாமல் அல்லது திருப்தியில்லாமல் மழுங்கடித்து விடுகிறது. இந்த பிரச்சனை ஆண்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என 1970 வரை நம்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட பல ஆய்வுகள் சக்கரை நோயினால் பாதிப்படைந்த பெண்களுக்கும், பால் உறுப்புகளில் மென்மை தன்மை அல்லது பசைதன்மை அதிகம் ஏற்பட்டு பாலுறவில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சக்கரை நோயின் ஒரு பாதிப்பான, இளம் வயதினரை அதிகமாக தாக்கும் ரத்தகுழாய் தடிப்பு என்ற நோய், ஆண்குறி விறைப்பு தன்மையையும், பெண்கள் உச்சகட்டம் அடைவதில் இயலாமையையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயின் தாக்குதல் காலம் என்பது உடல் வலுவை பொறுத்து சில மாதங்களோ, சில வருடங்களோ கூட நீடிக்கும.; இதனால் ஏற்படும் அதீதமான மன அழுத்தத்தால் ஏற்படும் நம்பு மண்டல பாதிப்புகள் பாலியல் குறைபாடுகளை அதிகரிக்கவும் செய்கிறது.

HbA1C அளவை பொருத்து தான் சர்க்கரை நோய் சிகிச்சை முறைகள் மாறுபடும்



ர்டியு1ஊ   அளவை பொருத்து தான் சர்க்கரை நோய் சிகிச்சை முறைகள் மாறுபடும்
நம்மிடையே முதல் முறையாக சிகிச்சைக்கு வரும் பலரும், ‘இந்த தடைவ தான் சர்க்கரை இவ்வளவு அதிகம் உள்ளது” என்று கூறுகின்றனர். எப்போதும் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என்பது இவர்களின் வாதம். கடந்த வாரம் என்னிடத்தில் சிகிச்சைக்கு ஒருவர் வந்திருந்தார். கால் வீக்கம், மயக்கம், சோர்வு, கண் பார்வை குறைவு என்ற பிரச்சனைகளுடன் நம்மை பார்கக வந்திருந்தார்.
சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 226 மி.கி
சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு 360 மி.கி
மூன்று மாக சராசரி சர்க்கரை ர்டியு1ஊ  அளவு 13.7 மூ
ஆனால் இவர் கையில் வைத்திருக்கும் ரிப்போர்ட்டை பார்த்தால் 180, 202, 134 என்று ரேண்டமாக (ஏதோ ஒரு வேளையில்) ரத்த பரிசோதனை செய்துள்ளளார். எனக்கு இவ்வளவு வர வாய்ப்பில்லை என்று கூறினார். முழு உடல் பரிசோதனை செய்ததில், கிட்னியில் கிரியாட்டினின் 3.2 மி.கி யூரியா, 104 மி.கி அளவிலும், இருந்ததாலும் கண்ணில் ரத்தக்கசிவினால் விழிததிரை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் எங்கு தவறு என்று யோசிக்க வேண்டும். இவர் எப்பொழுதும் மாலை நேரத்தில் ரேண்டமாக பரிசோதனை செய்வார்.
சாப்பிடும் முன் பரிசோதனை,சாப்பிட்ட பின் பரிசோதனை செய்வதில்லை. ர்டியு1ஊ வாழ்க்கையில் செய்ததே இல்லை. அவ்வப்போது கண்ணுக்கு கண்ணாடி மாற்றியுள்ளாரே தவிர விழித்திரை பார்த்ததே இல்லை.
5 குருடர்கள் யானையை தடவி பார்த்தது போல் தனித்தனியாக அவ்வப்போது சில பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டு எனக்கு நன்றாக இருக்கிறது என்று விட்டுவிட்டார்.
இவர் கூறுவது போல் எப்பொழுதும் சுமாரான கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த பாதிப்பு உண்டாகாது.மூன்று மாதத்திற்கு ஒரு முறை ர்டியு1ஊ செய்திருந்தால் சர்க்கரையின் உண்மையான நிலை தெரிந்திருக்கும்.இதுவே ர்டியு1ஊ பரிசோதனை தான், சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தெரிவிக்கும்.
ஓவ்வொரு முறை சாப்பிடும் போதும் சர்க்கரை ஏறி இறங்கும். ஒரு நாளில் 3 முறையும்,ஒரு மாதத்தி;ல் 90 முறை ஏறி இறங்குகிறது. இதில் ஏதாவது ஒரு நாள் மட்டும் பரிசோதனை செய்து பார்த்தால் துல்லியமாக சர்க்கரை கட்டுப்பாட்டை அறிய முடியாது.அதற்காக தான் ர்டியு1ஊ பரிசோகதனை செய்யப்படுகிறது.
ர்டியு1ஊ பரிசோதனை முடிவை வைத்து தான் சிகிச்சை முறையும் மாறுபடும.;

ர்டியு1ஊ சோதனை என்பது, சர்க்கரையின் நோயின் தன்மையை டாக்டருக்கு சொல்லக்கூடியது. ர்டியு1ஊ 10.8க்கு இருந்தால், இதன் சராசரி சர்க்கரை 275 மி.கி
ர்டியு1ஊ 10மூ க்கு மேல் இருந்தால் சாப்பிடும் முன் சர்க்கரை 200 -250 மேல் இருக்கும்.தொடர்ந்து சர்க்கரை 250க்கு மேல் இருந்தால் .இன்சுலின் சுரப்பு மிக மிக குறைந்து விட்டது என்று அர்த்தம். இந்த கடடத்தில் பலருக்கு மாததிரைகள் செயல்படாது. இன்சுலின் ஊசி தான் தரப்பட வேண்டும்.
ர்டியு1ஊ 10மூ க்கு மேல் இருந்தால் அதிக சர்க்கரை இரத்தததில் இருந்தால் ரத்தம் உறைந்து விடும்  வாய்ப்பு உள்ளது. இதனால் உடனடி விளைவு டயபடீஸ் கோமா உண்டாகலாம்.
இரத்ததின் அடர்த்தி அதிகமாகி உடலில் நீர்சத்து குறைந்து இரததம் கொழகொழவெனவாகி விடும்.இரத்ததில் உள்ள சிவப்பணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு ரத்த ஓட்டம் தடைபடலாம்.டயபடீஸ் கோமா மாரடைப்பு திடீரென்று உண்டாகும் வாய்ப்பு அதிகம். இதனால் தான் இன்சுலின் தரப்படுகிறது. சர்க்கரை குறைந்த பின்பு பலருக்கு மாததிரைக்கு மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை 250-300 மி;. கி உள்ளவர்களுக்கு சில நேரங்கில் உள்நோயாளியாக சிகிச்சை அளிப்பது ஏன்?
“நான் நன்றாக இருக்கிறேன். ஏன் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டும்? ஏன் டாக்டர் என்னை அட்மிட் ஆக சொல்கிறார்? ஏன்று பலரும் கேட்கும் சாதாரண கேள்வி..
அதற்கு காரணம் என்ன தெரியுமா??
1.       1 அல்லது 2 நாட்களில் சர்க்கரையை குறைக்கவும்.
2.       குளுக்கோஸ் ஏற்றுவது மூலம் நீர் சத்தை அதிகப்படுத்தி அமில மயக்கத்தால்(னுமுயு-னயைடிநவiஉள மநவழ யஉனைழளளை) ஏற்படும் மூளை செயலிழப்பை தடுப்பதற்கு இது அவசியம்.
சர்க்கரை நோய் உள்ளவர் அவருடைய அறிகுறியை மட்டும் தான் பார்க்கிறார்.
ஆனால் மருத்துவர் அவருக்கு ஏற்படும் ஆபத்தை பார்க்கிறார். இதுதான் வித்தியாசம். அதனால் தான் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை மிகவும் அவசியம்.
ர்டியு1ஊ   அளவை பொருத்து தான் சர்க்கரை நோய் சிகிச்சை முறைகள் மாறுபடும்
நம்மிடையே முதல் முறையாக சிகிச்சைக்கு வரும் பலரும், ‘இந்த தடைவ தான் சர்க்கரை இவ்வளவு அதிகம் உள்ளது” என்று கூறுகின்றனர். எப்போதும் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை என்பது இவர்களின் வாதம். கடந்த வாரம் என்னிடத்தில் சிகிச்சைக்கு ஒருவர் வந்திருந்தார். கால் வீக்கம், மயக்கம், சோர்வு, கண் பார்வை குறைவு என்ற பிரச்சனைகளுடன் நம்மை பார்கக வந்திருந்தார்.
சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 226 மி.கி
சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு 360 மி.கி
மூன்று மாக சராசரி சர்க்கரை ர்டியு1ஊ  அளவு 13.7 மூ
ஆனால் இவர் கையில் வைத்திருக்கும் ரிப்போர்ட்டை பார்த்தால் 180, 202, 134 என்று ரேண்டமாக (ஏதோ ஒரு வேளையில்) ரத்த பரிசோதனை செய்துள்ளளார். எனக்கு இவ்வளவு வர வாய்ப்பில்லை என்று கூறினார். முழு உடல் பரிசோதனை செய்ததில், கிட்னியில் கிரியாட்டினின் 3.2 மி.கி யூரியா, 104 மி.கி அளவிலும், இருந்ததாலும் கண்ணில் ரத்தக்கசிவினால் விழிததிரை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் எங்கு தவறு என்று யோசிக்க வேண்டும். இவர் எப்பொழுதும் மாலை நேரத்தில் ரேண்டமாக பரிசோதனை செய்வார்.
சாப்பிடும் முன் பரிசோதனை,சாப்பிட்ட பின் பரிசோதனை செய்வதில்லை. ர்டியு1ஊ வாழ்க்கையில் செய்ததே இல்லை. அவ்வப்போது கண்ணுக்கு கண்ணாடி மாற்றியுள்ளாரே தவிர விழித்திரை பார்த்ததே இல்லை.
5 குருடர்கள் யானையை தடவி பார்த்தது போல் தனித்தனியாக அவ்வப்போது சில பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டு எனக்கு நன்றாக இருக்கிறது என்று விட்டுவிட்டார்.
இவர் கூறுவது போல் எப்பொழுதும் சுமாரான கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த பாதிப்பு உண்டாகாது.மூன்று மாதத்திற்கு ஒரு முறை ர்டியு1ஊ செய்திருந்தால் சர்க்கரையின் உண்மையான நிலை தெரிந்திருக்கும்.இதுவே ர்டியு1ஊ பரிசோதனை தான், சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தெரிவிக்கும்.
ஓவ்வொரு முறை சாப்பிடும் போதும் சர்க்கரை ஏறி இறங்கும். ஒரு நாளில் 3 முறையும்,ஒரு மாதத்தி;ல் 90 முறை ஏறி இறங்குகிறது. இதில் ஏதாவது ஒரு நாள் மட்டும் பரிசோதனை செய்து பார்த்தால் துல்லியமாக சர்க்கரை கட்டுப்பாட்டை அறிய முடியாது.அதற்காக தான் ர்டியு1ஊ பரிசோகதனை செய்யப்படுகிறது.
ர்டியு1ஊ பரிசோதனை முடிவை வைத்து தான் சிகிச்சை முறையும் மாறுபடும.;

ர்டியு1ஊ சோதனை என்பது, சர்க்கரையின் நோயின் தன்மையை டாக்டருக்கு சொல்லக்கூடியது. ர்டியு1ஊ 10.8க்கு இருந்தால், இதன் சராசரி சர்க்கரை 275 மி.கி
ர்டியு1ஊ 10மூ க்கு மேல் இருந்தால் சாப்பிடும் முன் சர்க்கரை 200 -250 மேல் இருக்கும்.தொடர்ந்து சர்க்கரை 250க்கு மேல் இருந்தால் .இன்சுலின் சுரப்பு மிக மிக குறைந்து விட்டது என்று அர்த்தம். இந்த கடடத்தில் பலருக்கு மாததிரைகள் செயல்படாது. இன்சுலின் ஊசி தான் தரப்பட வேண்டும்.
ர்டியு1ஊ 10மூ க்கு மேல் இருந்தால் அதிக சர்க்கரை இரத்தததில் இருந்தால் ரத்தம் உறைந்து விடும்  வாய்ப்பு உள்ளது. இதனால் உடனடி விளைவு டயபடீஸ் கோமா உண்டாகலாம்.
இரத்ததின் அடர்த்தி அதிகமாகி உடலில் நீர்சத்து குறைந்து இரததம் கொழகொழவெனவாகி விடும்.இரத்ததில் உள்ள சிவப்பணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு ரத்த ஓட்டம் தடைபடலாம்.டயபடீஸ் கோமா மாரடைப்பு திடீரென்று உண்டாகும் வாய்ப்பு அதிகம். இதனால் தான் இன்சுலின் தரப்படுகிறது. சர்க்கரை குறைந்த பின்பு பலருக்கு மாததிரைக்கு மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை 250-300 மி;. கி உள்ளவர்களுக்கு சில நேரங்கில் உள்நோயாளியாக சிகிச்சை அளிப்பது ஏன்?
“நான் நன்றாக இருக்கிறேன். ஏன் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டும்? ஏன் டாக்டர் என்னை அட்மிட் ஆக சொல்கிறார்? ஏன்று பலரும் கேட்கும் சாதாரண கேள்வி..
அதற்கு காரணம் என்ன தெரியுமா??
1.       1 அல்லது 2 நாட்களில் சர்க்கரையை குறைக்கவும்.
2.       குளுக்கோஸ் ஏற்றுவது மூலம் நீர் சத்தை அதிகப்படுத்தி அமில மயக்கத்தால்(னுமுயு-னயைடிநவiஉள மநவழ யஉனைழளளை) ஏற்படும் மூளை செயலிழப்பை தடுப்பதற்கு இது அவசியம்.
சர்க்கரை நோய் உள்ளவர் அவருடைய அறிகுறியை மட்டும் தான் பார்க்கிறார்.
ஆனால் மருத்துவர் அவருக்கு ஏற்படும் ஆபத்தை பார்க்கிறார். இதுதான் வித்தியாசம். அதனால் தான் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை மிகவும் அவசியம்.

எப்படி தெரிந்துக் கொள்வது?



எப்படி தெரிந்துக் கொள்வது?
சர்க்கரை வியாதி எவ்வளவு சாதாரணமாகிவிட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை அது பார்ப்பதில்லை! ஒவ்வொரு 10 வினாடியிலும் ஒரு புதிய சக்கரை நோயாளி கண்டு பிடிக்கப்படுகிறார் என்பது ஒரு அதிர்ச்சியான உண்மை!! சக்கரை நோயாளிகள் உடலில் சக்கரையின் அளவு 24 மணி நேரமும் சீராக இருக்க வேண்டும்!! ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியவில்லை!! இதனால் சக்கரையின் அளவானது உடலில் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். குறிப்பாக மதிய உணவு உண்டவுடன்!! ஏனென்றால் நம் உணவு முறையில் மதிய உணவில் கலோரிகள் அதிகம்! அப்படியானால் என் ரத்தத்தில் எவ்வளவு சக்கரை கடந்த சில மாதங்களாக இருந்தது? என்ற கேள்வி எழும்!! அதனைத் தெரிந்து கொண்டால் நிச்சயம் நமது உடலில் சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து கொள்ளலாம்!! அப்படி ஒரு சோதனை இருக்கிறதா? என்று கேட்டால் ஆம் உள்ளது என்பதுதான் பதில்!! அந்த சோதனையின் பெயர் என்ன? அந்த சோதனையின் பெயர் ர்டி யு1உ இந்த சோதனையின் மூலம் கடந்த இரண்டிலிருந்து மூன்று மாதங்களாக ரத்தத்தில் சக்கரை இருந்தது என்று அறியலாம்.


இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள்வரை! இவை இரத்தத்தில் இருந்தபோது அவற்றின் உடல் மீது இரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரை ஒட்டி இருக்கும். அதிகம் சக்கரை இருந்தால் அதிகமாகவும் கொஞசம் சக்கரை இருந்தால் குறைவாகவும் ஒட்டி இருக்கும்! இதனை அளந்தால் சக்கரை நம் ரத்தத்தில் நான் சொன்னபடி கடந்த மூன்று மாதமாக எவ்வளவு இருந்தது என்று அறியலாம்!
இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
1. ஏழு அல்லது 7க்குக்கீழ் - சக்கரை அளவு மிகச்சரியாக உள்ளது.
2. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் - 7மூ - 8மூ- பரவாயில்லை. 7க்கு குறைக்க வேண்டும்!
3.எட்டுக்கும் 10க்கும் இடையில்-இரத்தத்தில் சக்கரை மிக அதிகம்!
4.பத்துக்கு மேல்-,10மூ - உங்கள் சக்கரை அளவு மிக மிக அதிகம்!! ஆகையினால் சக்கரை நோயாளிகள் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது என நம்பிக்கை கொண்டேர்ரும் இந்த சோதனையை செய்து கொள்ளலாம்!!!


யார் வேண்டுமானாலும் இந்த வழிமுறையின் மூலம், தங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியப்பாடு இருக்கிறதா என்பதை சுமார் 80 சதவீதம் சரியாக கணிக்க முடியும்.
இப்படியாக சர்க்கரை நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப்படுத்துவதும் எளிது. சர்க்கரை நோய் உண்டாக்ககூடிய இதர உடல்நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்.

யார்,யாருக்கு வரும்?



யார், யாருக்கு வரும்?
இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வரலாம்.
ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் வயது அடிப்படையில் பார்ப்போமா?
ஒரு குழந்தைக்கு அல்லது இளவயதினருக்கு வருவதை விட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
அமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு உள்ளதாகத் தெரிகிறது.
வயது வருடங்களில் பத்தாயிரம் பேரில் சர்க்கரை உள்ளவர்கள்
1  முதல்  20  வயது வரை 4 சதவிகிதம்.
20 முதல்  40  வயது வரை 10 சதவிகிதம்.
50 முதல்  60  வயது வரை 100 சதவிகிதம்.
60 முதல்  70  வயது வரை 1000 சதவிகிதம்.
இந்த விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாலினம் அடிப்படையில்..
இளவயது சர்க்கரை நோய் (முதல் வகை) ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது.
முதிர்வயது சர்க்கரை (இரண்டாவது வகை) ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.
பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
45 முதல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்களை இந்த நோய் தாக்குகிறது.
திருமணம் கூட ஒரு விளைவுதான்..
ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே காலத்தை ஓட்டும் ஆண்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாக வருகிறது. விவாகரத்து செய்து கொண்ட அல்லது குடும்பத்தை விட்டு விலகி தனியே வாழும் ஆணுக்கும் சர்க்கரை நோய் அதிகம் வருவதாகத் தெரிகிறது.
பெண்களில் இதற்கு நேர் எதிர்மறையான நிலை காணப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாத அல்லது விவாகரத்து செய்து கொண்ட, குழந்தைகள் இல்லாத பெண்களுக்கு இந்த நோய் அதிகம் வருவதில்லை.திருமணமான பெண்களுக்கே அதிகம் வரும்.
பிரசவ காலத்தில் சில பெண்களுக்கு சர்க்கரை நோய் தோன்றுகிறது.
ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு சர்க்கரை நோய் குறைவாகவும், பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.!
கருவுறும் காலத்தில் உடலில் ஏற்படும் இயக்க நீர் மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கருவுறும் போது, அல்லது பிரசவத்திற்குப் பின் பெரும்பாலான பெண்களின் எடை அதிகமாகிவிடுகிறது. சர்க்கரை அதிகம் வர இதுவும் ஒரு காரணம்.
பரம்பரையில் எவருக்கும் நீரிழிவு இல்லாதிருந்தாலும் கூட, 6 குழந்தைகள் அதற்கு மேலும் பெறும் பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் பெரும்பாலும் சர்க்கரை வந்து விடுகிறது.
அதிக எடையுள்ள குழந்தைகளைப் பெறும் தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு 15சதவிகிதம் அதிகம் எனவும் தெரிகிறது.
பிறக்கும் போது குழந்தையின் எடை 4.5 கிலோவுக்கு மேல் இருந்தால், அந்தத் தாய்க்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
அடுத்து மிக முக்கியமான காரணி நாம் உண்ணும் உணவு முறை
அதிக கலோரிகள் உள்ள உணவை உண்ணும் சமூகத்தில் சர்க்கரை நோய் பரவலாகக் காணப்படுகிறது.
கலோரிகள் குறைந்த எளிய உணவையே எப்போதும் உட்கொள்பவர்களுக்கு இந்நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உணவுத் தட்டுப்பாடு இருந்ததால் எளிய உணவையே மக்கள் உண்டு வந்தனர். இந்தக் கால கட்டத்தில் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்ததாம்!
கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது.
மன அழுத்தம்
மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.
மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு இயக்க நீர் மாற்றங்கள் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருதய நோய்கள், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கும் கூட மன அழுத்தமே முக்கியமான காரணமாக அமைகிறது.
மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பார்கள். முக்கியமாக சாக்லேட், சிப்ஸ் போன்றவை. இதனால் உடல் எடை அதிகமாவதும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணமாகிறது.
உடல் உழைப்பு இல்லாமை.
ஓடியாடி உழைப்பவர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் வருவதில்லை.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வருகிறது.

போதைப் பொருட்கள்
புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
பாரம்பரியம்
சர்க்கரை நோய் முழுக்க முழுக்க ஒரு பரம்பரை நோய் என்பது இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் பரம்பரையில் எவருக்கேனும் இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு கணிசமாக உயர்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
யார், யாருக்கு சர்;க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்? சுருக்கமாகச் சொல்கிறேன்.
பரம்பரையில் இந்நோய் உள்ளவர்களுக்கு
உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு
ஆண்களை விட பெண்களுக்கு
இளைஞர்களை விட முதியவர்களுக்கு
ஆண்களில் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு
பெண்களில் கல்யாணம் ஆகி குழந்தை உள்ளவர்களுக்கு
அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு
எடை அதிகமான குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு
மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு
போதைப் பொருட்களுக்கு அடிமை யானவர்களுக்கு.

கர்ப்பகால சர்க்கரை



கர்ப்பகால சர்க்கரை நாளுக்கு நாள் அதிகமாக என்ன காரணம்?
1.      திருமண வயது – முன்பை விட அதிகம்
2.      உடல் எடை – முன்பை விட அதிகம்
3.      உடற்பயிற்சி இல்லாதது,சத்தில்லாத சக்கையான உணவு சாப்பிடுவது,அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுவது,நார் சத்துள்ள உணவுகளை சாப்பிடாதது,கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவது
4.      பெற்றோர்களுக்கு சர்க்கரை இருப்பது
5.      கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்,குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகமாக சாப்பிடுவது,மலட்டுத்தன்மைக்கு சிகிச்சைக்கு பெற்று ஹார்மோன் மாத்திரை சாப்பிடுவது ஒரு முக்கிய காரணம்
கர்ப்பகாலத்தில் சர்க்கரை அதிகம் இருந்தால் குழந்தைக்கு உண்டாகும் பாதிப்புகள்
முதல் 3 மாதம்     - உடல் ஊனம், பிறவி கோளாறுகள்
4- 6 மாதங்களில்    - மூளை வளர்ச்சியின்மை
7 – 9 மாதங்களில்  - அதிக எடையுள்ள குழந்;தை,சுவாச பிரச்சனையுள்ள குழந்தை.
அதே போல் பிறக்கும் குழந்தைக்கு தாழ்நிலை சர்க்கரை ,மஞ்கள் காமாலை,போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது.இது தவிர குழந்தையுடைய ஆரோக்கியமே கேள்விக்குறியாக மாறி விடுகிறது. உச்சகட்டமாக தாயின் சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படாமல் போகும் போது குழந்தை வயிற்றிலேயே இறந்தும் பிறக்கலாம். அல்லது பிறந்து இறக்கலாம்
டீயமநசள ர்லிழவாநளளை குழநவயட ழுசபைin ழக னளைநயளந அதாவது கர்ப்ப காலத்தில் சர்க்கரை இருக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் அதிக எடை,சர்க்கரை நோய்,இருதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது இந்த கோட்பாடு.அப்படி பார்த்தால் சிறிய வயதிலேயே அதிய சர்க்கரை உள்ளவர்களை நாம் சந்திக்க நேரிடும்.
என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பம் அடைந்தவுடன் சர்க்கரை உள்ளதா என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பிறகு 4 வது மாதத்திலும் 7 வது மாதத்திலும் பரிசோதனை செய்ய வேண்டும்,இவர்கள் மருத்துவமனைக்கு வரும்; போது(எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை) 50 கி குளுக்கோஸ் கொடுத்து 1 மணி நேரம் கழித்து ளிழவ வநளவ செய்ய வேண்டும்.
140 மி.கி கீழ் -சர்க்கரை இல்லை
140 மி.கி மேல் - புவுவு (குளுக்கோஸ் தாங்குதிறன் பரிசோதனை அவசியம்)
விழிப்புணர்வு அவசியம்
ஆரோக்கிய உணவு பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.பரிசோதனை அதைவிட முக்கியம்.நண்பர்களே உங்கள் மருமகள்,மகள் அல்லது பேத்தி கர்ப்பமாக இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.