சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

கால்கள் கவனம்



கால்களை கவனமுடன் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும்
1.பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆராயுங்கள்.உங்களால் அடிபாகத்தை பார்க்க முடியவில்லை என்றால்,கண்ணாடியையோ,மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள்.
2. கால்களை சுத்தமாகவும்,உலர்ந்த நிலையிலும் வைத்திருங்கள்.வெதுவெதுப்பான நீரில் தினமும் கால்களை கழுவுங்கள்.விரல் இடுக்குகளில் கரபெரள வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
3. சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதக்கப்படுவதால் வியர்ப்பது குறைந்து தோல் வறண்டுவிடும்,வறண்ட தோலில் அரிப்பு,வெடிப்பு ஏற்பட்டுத் தொற்று ஏற்படலாம்,எனவே தோல் வறண்ட நிலை ஏற்பட்டால் அதனை ஈரப்படுத்துங்கள்.
4. இரத்த ஓட்டம் ஒழுங்காக நடைபெற உட்காரும் போது கால்களைத் தூக்கி வையுங்கள்.மேலும் கணுக்கால்களையும் விரல்களையும் அசைத்துக் கொண்டீட இருக்கவும்.இறுக்கமான காலுறைகளை அணிய வேண்டாம். கால் மேல் கால் போட்டு அமருவதை தவிர்க்கவும்.
5. வியர்வையை உறிஞ்சும் பருத்தியினாலான காலுறைகளையே தேர்ந்தெடுத்து அணியவும்.நைலான் வகைகளை தவிர்க்கவும்.ரப்பர் மற்றும் எலாஸ்டிக் வளையங்கள் உள்ளவற்றை தவிர்க்கவும்.சரியாக பொருந்தாத காலுறைகள் தோலில் உரசிக் காயங்கள் ஏற்படுத்துமாதலால் அதனையும் தவிர்க்கவும்.
6. கால் நகங்களை வெட்டும் போது மிகவும் கவனமாக இருக்கவும்.உங்கள் விரல் நுனி வரை உள்ளவாறு பார்த்துநகங்களை வெட்டவும்.ஓரங்களழல் உள்ள கூர்மையான பகுதயைத் தேய்த்து மழுங்கச் செய்யவும்.உங்கள் விரல் நகங்களைச் சுற்றித் தோல் சிவந்து காணப்பட்டால் உடனே உங்கள் மருத்துவரிடம் காட்டவும்.
7.வெயில் காலங்களில் சூட்டுக் கொப்புளங்கள் ஏற்படாத வகையில் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள்.வீட்டிரும் கூட சாதாரணக் காலணிகளுடன் இருக்கபே நல்லது.
சில பேர் காலணிகளை அதிக விலைக் கொடுத்து வாங்குவார்கள்.அந்த காலணிகள் அவர்களின் காலுக்கு அணியாக இல்லாமல் விலங்காகவும் மாறி விடுகிறது.காலணிகள் கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும் அது நமக்கு வசதியாகவும் இருக்க வேண்டும்.சில காலணிகள் கால்களை இறுக்கி பிடித்தபடி இருக்கும்.நடக்கிற போது காலில் உரசி உரசி சின்ன சின்ன புண்களை ஏற்படுத்தும்.ஆகவே சர்க்கரை நோயாளிகள் செருப்புகளை வாங்கும் போது தன் காலுக்கேற்ற பாதிப்பில்லாத வசதியானதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல செருப்பு எப்படி இருக்க வேண்டும்?
மென்மையான தோலினால் மேற்பகுதியைக் கொண்டிருப்பவை நல்ல காற்றோட்டத்தை தரும்.நல்ல காற்றோடடம் வியர்வையைக் குறைத்து தோல் பிரச்சினைகள்  ஏற்படாது தடுக்கும்.
விரல் நுனி மூடும் படி உள்ளவை விரல்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
குதிகால் உயரமற்ற செருப்புகள் கால்களை பாதுகாப்பதுடன், கால்களுக்கு தொந்திரவு செய்யாதவை.
வளையும் தன்மையுள்ள அடிப்பகுதி உள்ள செருப்புகள், அதிர்வை எளிதில் உள் வாங்கிக் கொள்வதால் காலில் பாதிப்புகள் வர வாய்ப்புகள் குறைகிறது.ஆனால் இவை வழுக்கும் தன்மை கொண்டவையாக இருக்கக்கூடாது.
உங்கள் காலணி உங்களுக்குப் பொருந்துகிறதா?
புதிய செருப்புகள் வாங்கும் போது கீழ்க்கண்டவற்றைக் கவனிக்கவும்.
செருப்பின் நுனிப்பகுதி உங்கள் நீளமான விரல்களை விட கால் அங்குலம் நீளமாக இருக்க வேண்டும்.காலணியின் நுனிப்பகுதி நன்கு விரிந்து விரல்களை அழுத்தாவண்ணம் இருக்க காலணிகளையும் அணிந்து நடந்து பார்த்து வாங்கவும்.
முடிந்த வரை மாலை நேரத்திலேயே காலணிகள் வாங்கவும்.மாலை நேரத்தில் காலகள் சற்று வீங்கிப் பெரிதாக இருப்பதால் காலையில் வாங்கும் காலணிகள் பொருந்தாமல் போகும்.எனவே மாலையிலேயே காலணிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஒரு காலை விட மற்றொரு கால் பெரிதாக இருந்தால் பெரிய காலுக்கு ஏற்ற காலணிகளையே வாங்கவும்.
கால்களில் உணர்வுக் குறைவு காணப்பட்டால் வீட்டிற்குச் சென்றதும் 30 நிமிடம் காலணிகளை அணியவும்.பின்னர் அவற்றைக் கழற்றிக் கால்களைப் பரிசோதிக்கவும்.கால்கள் சிவந்து காணப்பட்டால் காலணி பொருந்தவில்லை என்று அர்த்தம்.அப்படியாயின் காலணியைக. மாற்றி விடவும்.

No comments:

Post a Comment