சர்க்கரை நோய்

Loading

Friday, January 20, 2012


சர்க்க்கரைநோய்க்கு தொடர் பரிசோதனை அவசியம்.
“இனிப்பு சாப்பிடுவதில்லை,காபிக்கு சர்க்கரை போடுவதில்லை.ஆனாலும் எனக்கு சர்க்கரை குறையவில்லையே டாக்டர்..”என என்னிடம் வந்து ஒருவர் கேட்டார்.
வேற என்ன சாப்பிட்டீங்க ன்னு நான் கேட்க…தூக்கி போட்டார் பாருங்க ஒரு குண்ட… பொங்கல்,ஊத்தப்பம்,4 இட்லி,சர்க்கரை போடாமல் காபி..என்று சொன்னார்.
சர்க்கரை,இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாய் இருப்பதைக் குறிக்கும். குளுக்கோஸைத்தான் தமிழில் சர்க்கரை என்கிறோம்.சர்க்கரை ஏறாவிட்டால்
உடம்பில் சர்க்கரை ஏறாது என்று நினைக்கிறார்கள்.மாவு சதது; நிறைந்த பொருட்கள் அதாவது தானியங்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடம்பில் சர்க்கரை அதிகமாகிறது.
அதாவது அரிசி, கோதுமை, ராகி,மக்காச்சோளம், கம்பு, மைதா, சோளம், ஓட்ஸ், ரவை, சேமியா போன்றவற்றிலிருந்து தாயாரிக்கப்படும் எந்த உணவும ; சர்க்கரையை அதிகப்படுத்தும்.இந்த தானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ளும ; போது, ஜீரணமாகும் சக்தி குறைந்து விடுவதால் அதாவது அவற்றை சக்தியாக மாற்றுவதற்கு அதிக அளவு இன்சுலினை உடல் சுரக்க வேண்டியிருக்கிறது.; ஆனால ; சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் குறைபாடு இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி இரத்தக்குழாயில் படிந்து சில ஆண்டுகளில் அடைத்துவிடுகிறது.

பெரிய இரத்த்தக்கு;குழாய் அடைப்ப்பால் உண்ட்டாகும் அறிகுறிகள்:;:

கால் எரிச்சல்,மதமதப்பு,பஞ்சு மேல் நடப்பது,ஊசி குத்துவது போன்ற உணர்வுகள். கால் புண், கொப்புளங்கள், நடந்தால் நெஞ்சு வலி, மூச்சிறைப்பு, படபடப்பு, கால் கை ஒரு பக்கம் மறத்துபோதல், பக்கவாதம்,சமநிலையின்மை,தலைசுற்றல, மயக்கம்,போன்றவை.

சிறிய இரத்த்தக்கு;குழாய் அடைப்ப்பால் உண்ட்டாகும் அறிகுறிகள்:;:
கண்பார்வை மங்குதல், கண்வலி, இரட்டை பார்வை, அடிக்கடி கண்கட்டி, கால் முகம் வீங்குதல், வாந்தி, சிறுநீரில் புரதம் ஒழுகுதல்.போன்றவை.
சர்க்கரை மட்டுமல்லாது,உப்பு,கொழுப்பு சத்து அதிகமானால் இரத்த குழாயில் அடைப்பு எற்படும்.மேலும் புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், டென்சன், உடற்பயிற்சியின்மையாலும் இரத்த குழாயில் அடைப்பு எற்படும்.

சர்க்க்கரையை குறைக்க்க என்ன்ன செய்ய்ய வேண்டும்?
;ஐந்து இட்லிக்கு பதில் மூன்று இட்லி,அத்துடன் காய்கறி,பருபபு; ,மதியம் மூன்றில் ஒரு பங்கு சாதத்தை குறைத்து கீரை பருப்பு சாப்பிட வேண்டும். இரவு சப்பாத்தியை ஒன்று, இரண்டு குறைத்து பருப்பு வகையை சேர்த்து சத்து உணவாக சாப்பிட வேண்டும்.

உடற்ப்பயிற்சி
ரத்தத்தில் அதிக அளவு இருக்கும் குளுக்கோஸ் சக்தியாக மாறுவதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாகும். நோயாளியின் பொதுவான உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிறச்  திட்டத்தை வகுத்து டாக்டர் உதவுவார். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வது முக்கியமானதாகும்.
உடற்பயிற்சி வாழ்நாளை 10 முதல் 15 ஆண்டுகள் அதிகரிக்கும,; இருதயத்தை வலுப்பெற செய்யும்.ரத்த குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை அதிகரித்து ரத்த குழாய் அடைப்பை நீக்குகிறது.
நீங்கள் நல்ல உணவுக்கட்டுப்பாட்டிலதான் இருக்கிறீர்கள்..நன்றாகத்தான் உடற்பயிற்சியும் செய்கிறீர்கள்..என்றாலும் ….சர்க்கரை…..குறையவே இல்லையே? டாக்டர்… .என்கிறீர்களா?
நீங்கள் சரியாகத்தான் இருப்பீர்கள்,ஆனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரை
பொருத்தமானதாக இருக்க வேண்டும். அது என்ன மாதிரியான பொறுத்தமான மாத்திரை என்பதை உங்களை சோதிக்கும் சர்க்கரை நோய் மருத்துவரால் மட்டுமே கணிக்க முடியும். மாதமாதம் சர்க்கரை பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மட்டும் சிகிச்சையல்ல. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்தால் தான் சர்க்கரை கட்டுப்பாட்டின் உண்மை நிலை தெரிய வரும்.

தொடர் சிகிச்சை:
சாக்கரைக்கு தொடர் சிகிச்சை பெறுவது அவசியம். கொழுப்புச்சத்து மற்றும்
சிறுநீரக,கண், மற்றும் கால் பரிசோதனைகளை, குறைந்த பட்சம் வருடத்திற்கு
ஒருமுறையாவது அவசியமாக செய்ய வேண்டும்.
ஓயாமல் மருத்துவர் சிகிச்சைக்கு வரச்சொல்லி காசு பிடுங்குகிறார் என்று ஒரு சாரார் குற்றம் சுமத்துவார்கள். தொடர்ந்து இரத்தப் பரிசோதனை செய்யவேண்டும், சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிசின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் செய்ய மாட்டார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்தால் கட்டாயம் தொடர் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள்.

“எனக்கு சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. நான் ஏன் தொடர் சிகிச்சைக்கு வர
வேண்டும்?? என்று மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு வந்தார ; ஒரு நோயாளி. 2 ஆண்டுகளுக்குப் பின் கால்கள் வீங்கிவிட்டது. பரிசோதித்தபோது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது அவர் என்ன செய்வது டாகட் ர்..? என்று என்னிடம் ஒடி வந்தார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் எவ்வளவு பாதிப்பு வரும் என்று பல நோயாளிகளுக்குத் தெரிவதில்லை. டயலிசிஸ் செய்ய வாரம் 1500, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் சிகிச்சைக்குப் பின் வாரத்துக்கு 6000 செலவாகும், இப்படி அதி தீவிரமான பொருளாதார சிக்கலில் கொண்டு போய் தள்ளிவிடும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
சமீபத்தில் என் உறவினர் ஒருவர் இளம் வயது. சக்கரையால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டது. சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய ஆகும் செலவும் அதன் பிறகு வாரம் 6000 ரூபாய் போல செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த செலவு செய்ய முடியாது என்பதால் படுத்த படுக்கையாகி 25 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

அடுத்து சர்க்கரை நோயால் பாதிக்கும் இன்னொரு முக்கியமான உறுப்பு கால். கால் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், நிறைய நோயாளிகள் ஒத்துக் கொள்வதில்லை. இதனால் சக்கரை நோயாளி (நன்கு படித்தவர்த்தான்..என்ன செய்வது) ஒருவருக்கு காலில் புண் ஏற்பட்டு அந்தப் புண்ணை ஆற்றி சிகிச்சை பெற 50000 செலவானது.
கண் பரிசோதனைச் செலவு 100 ரூபாய் வரும். இதைச் செய்தால ; ஆரம்பத்திலேயே கண்ணில் கோளாறு வராமல் தடுக்கலாம். ஆனால் விட்டுவிட்டால் கண்ணில் இரத்தக் கசிவைக் கண்டு பிடுத்து சிகிச்சை செய்துகொள்ள 10000 வரை செலவு ஆகும்.
அடிக்கடி செக் அப் செய்துகொள்வதே சிறந்தது. நமக்குத்தான் இன்சூரன்ஸ் இருக்கே பெரிய ஆஸ்பத்திரிகளில் மதுரை,சென்னையில் போய் வைத்தியம் செய்து கொள்வோம் என்று நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போவது ஆபத்து. பிறகு உயிருக்கு ஆபத்து என்று வரும்போது எவ்வளவு பணம் கொடுத்தாலும்,உங்கள் நலத்தை மீட்டுக்கொண்டு வர முடியாது. ஏனென்றால் உங்களது உடல்நலம் உங்களை விட உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆகவே சர்க்கரைநோயி;ன் பாதிப்புகளிலிருநது; மீள்வதற்கு உடனே விழித்துக் கொள்ளுங்கள்.
மாதம் ஒருமுறை மருத்துவரை சந்தித்து சர்க்கரை,இரத்த அழுத்தம்,எடை சரியாக உள்ளதா? என்று கண்காணிக்க வேண்டியது அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு பின்விளைவுகள் வரும் வாய்ப்பை அறிந்து தடுத்துக் கொள்ளலாம்.மாதம் இருமுறையாவது டாக்டரிடம் பரிசோதனைக்கு செல்பவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதும், அவரது ஆலோசனைப்படி உணவு, உடற்பயிற்சி, மாத்திரைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

டாக்டர் சர்க்கரையை மட்டும் பார்ப்பதில்லை.எடை, ரத்த அழுத்தம், கொழுப்பு,
ரத்தக்குழாய் அடைப்பு, சர்க்கரைக்கான் அறிகுறிகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ற சிகிச்சை அளிப்பார்.

உடல் பருமன் உயிருக்கு எமன்

உடல் பருமன் என்ற்றால் என்ன?
உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறிக்கும்.
நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் செய்யும் வேலை இந்த இரண்டுக்கும்
இடையேயான வரவு - செலவு கணக்கில் ஏற்படும் சமமின்மையே உடல் எடை
அதிகரிக்க காரணம். நம் உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரித்திறன் அதிகமாக இருந்து, நமது உடல் செலவழிக்கும் கலோரித் திறன் குறைவாக இருந்தால் காலப்போக்கில் படிப்படியாக உடல் பருமனாகிறது.
உணவு கிடைக்காத போது சமளிப்பதற்காக அதிகமாக உணவு கிடைககு; ம் போது அதை கொழுப்பாக மாற்றி உடல் டெபாசிட் செய்து கொள்ளும். ஆதி மனிதனுக்கு அவசிய தேவையாக இருந்த இந்த தந்திரம் இன்று நமக்கு ஆபத்தாகி விட்டது.
இப்போது உடலின் தேவைக்கு சற்று அதிகமாக உணவை உட்கொண்டால் கூட அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

உடல் பருமனை அளவிடுவது எப்ப்படி?
சராசரி அளவைவிட பெரிதாக இருப்போரை பருமனாக இருப்பதாக குறிப்பிடுகிறோம். உடல் பருமனை அளவிட உடல் எடை குறியீட்டு எண் (BMI)
என்ற முறையைப் பயன்படுத்துகின்றனர். இது ஒருவரது உயரம் மற்றும் எடையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த அளவை சுருக்கமாக பி.எம்.ஐ எனக் குறிப்பிடுகிறோம்.
பி.எம்.ஐ 18.5-க்கு கீழ் சென்றால் அவர் குறைந்த எடை உடையவர். அதுவே 25-க்கும் அதிகமானால் அதிக எடை என்கின்றனர். 30-க்கும் மேல் என்றால் பருமன். 40-க்கும் மேல் என்றால் ஐயோ! குண்டு பூசணிக்காய் தான், இந்தியர்களை பொருத்தவரை பி.எம்.ஐ 23-க்கு அதிகமாக இருத்தாலே அதிக எடை என்று அறிவிக்கப்படடு; ள்ளது.

இந்தியர்களுக்கு தொப்பைதான் பெரிய எதிரி.
உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி உலகில் 100 கோடி பேர் அளவுக்கு
அதிகமான எடையுடன் உள்ளனர். 30 கோடி பேர் உடல் பருமனால் பதிக்கப்பட்டுள்ளனர். அதிக எடையும் உடல் பருமனும் ஏராளமான நோய்களைக் கொண்டு வருகின்றன.
சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு நோய்கள், சிலவகை புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

உடல் பருமன் ஏன்?
சக்கரை, கொழுப்பு, உப்பு போன்றவற்றை அதிகம் கொண்ட அதிக கலோரி சத்தும், குறைவான ஊட்டச்சத்தும் கொண்ட உணவு வகைகள் தான் இன்றைய உடல் பருமன் சிக்கலுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
துரித உணவுகள், நொறுக்குத் தீனி வகைகள், மென்பானங்கள் ஆகியவைதான் இன்றைய இளம் தலைமுறை உடல் பருமனுடன் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலகின் மொத்த இறப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 1 கோடி 66 லட்சம் இறப்புகளுக்கு இதயம் தொடர்பான நோய்களே காரணமாகின்றன. இந்த ஆபத்துக்கு காரணமாக இருப்பது முறையற்ற உணவு பழக்கம்தான்.
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுப்பழக்கம் ஒருபுறம், உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி பெட்டிகளின் முன ; அதிக நேரத்தைச் செலவழிப்பது மற்றொருபுறம். இந்த இரண்டும் சேர்ந்து உடல் பருமனுக்கு வழி செய்கிறது.
அமெரிக்காவில் 65 சதவீதத்தினர் அதிக எடையுடன் காணப்படுகின்றனர். இதற்கான மருத்துவச் செலவுகளுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.4,600 கோடி செலவழிக்கப்படுகிறது.
நாமும் அந்த ஆபத்தான நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.
உணவில் இரண்டு தன்மைகள் இருக்கின்றன. ஒன்று ருசி. இன்னொன்று சத்துக்கள்.
ஆனால் நாகரிக உலகில் ருசி எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக ; கொண்டதால் சத்துக்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.
எடை கூடுவது எப்படி: ஒரே நாளில் எடை கூடி விடுவதில்லை. கொஞச் ம் கொஞ்சமாகக் கூடுகிறது. தொடக்கத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரளவுக்கு மேல் பிரச்சனையான பிறகு தான், "ஐயோ" என்று அலறுகிறார்கள். உடல் நலபாதிப்பு அல்லது உடல் அழகு கெடும்போது தான் எல்லோரும் விழிக்கிறார்கள். அப்போதும் கண்டுகொள்ளாதவர்களும் உண்டு.
உடல் எடை கூடுவதால் அழகு மட்டும் கெடுவதில்ல. பல்வேறு நோயக் ளுக்கும் அது காரணமாகிறது. செக்ஸில் நாட்டம் குறையும்: உடல் எடை கூடுவதால் தாம்பத்திய உறவுக்குப் பங்கம் ஏற்பட்டு குடும்ப உறவுகள் பதிக்கப்படும் அபாயம் உள்ளது. உடல் எடை, அளவுக்கு அதிகமாகும் போது வழக்கமான செக்ஸில் ஈடுபட முடியாது. ஆர்வம ; இருக்கும், ஆனால்
உறவில் ஈடுபடும்போது உடல் ஒத்துழைக்காது. இதனால் துன்பமே மிஞ்சும்.
உடல் எடை அதிகமான பின் அதைக் குறைக்க கஸ்டப்படுவதை விட, எடை
கூடிவிடாமல் உடல் எடையை பராமரிப்பதே சிறந்தது.உடல் எடை,சர்க்கரை நோயின் வருவதற்கு ஒரு முக்கியமான காரணியாக அமைவதால்,நாம் நமது உடல் எடை சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.