சர்க்கரை நோய்

Loading

Friday, November 19, 2010

சர்க்கரை நோய் நோயாளிகளுக்கு வரும் கால் புண் நோய் பிரச்சனை

எனக்கு தெரிந்த ஒரு பிசினஸ் மேன் புலம்பிக் கொண்டே என்னிடம் வந்தார்.
“இந்தக் கால் புண் ரொம்ப நாளாப் பிரச்சனை குடுக்குது. எவ்வளவு நாள் மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. எவ்வளவு மருந்து சாப்பிட்டும் பிரயோசனமில்லை. பத்து வருசமா இருக்கு. முந்தி கொஞ்சம் கவனம் இல்லைத்தான். இப்ப ஒரு வருசமா நல்ல கொண்ரோல். பிளட் சுகர் வலு நோர்மலா இருக்கு எவ்வளவு நோர்மலா வைச்சிருந்தும் புண் காய மாட்டீங்குதே டாக்டர்” என்று நொந்துக் கொண்டார்.
அவருக்கு நீரிழிவு இருப்பது எனக்குத் தெரியும். உண்மைதான்! இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் பல நீரிழிவு நோயாளர்களுக்கு புண்கள் சுலபமாகக் குணமாகிவிடுகின்றன. ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக அக்கறையோடு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பலரின் புண்கள் மாதக்கணக்கில் மாறாது தொல்லை கொடுக்கன்றன.
இது ஏன்? இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதால் புண்கள் ஆறாதிருக்கும் நிலை உடனடியாக ஏற்படுவதில்லை. அது தொடர்ந்து அதிகரித்திருக்கும் போது, உடலில் படிப்படியாக தோன்றும் பல்வேறு பாதிப்புகளால்தான் புண்கள் ஆறாத நிலை ஏற்படுகிறது.
நீரிழிவு நோயாளர்களின் புண்கள் காயாதிருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறலாம்.
முதலாவது காரணமானது அவர்களது கால்கள் நீரிழிவு நோய் காரணமாக மரத்துப் போவதாகும். நரம்புகள் பாதிப்புறுவதால் அவற்றின் செயற்திறன் குறைந்து கால்களில் உணர்வு குறைந்து போகும். ஆரம்ப கட்டத்தில் நோயளர்கள் இதை உணர்ந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் நாட் செல்லச் செல்ல கால்களில் விறைத்த உணர்வு தெரியவரும். நடக்கும் போது மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்; பின்பு செருப்பு கழன்றால் கூடத் தெரியாத நிலை ஏற்படலாம். முள்ளு அல்லது ஆணி குத்தினாலோ, செருப்பு வெட்டினாலோ, தார் வீதி சுட்டுக் கொப்பளிப்பதோ தெரிவதில்லை.
கால்கள் மரத்திருப்பதால் ஏதாவது காயம் ஏற்படும்போது, வலி தெரியாது. அதை உணராது, மேலும் மேலும் அழுத்தி நடப்பதால் புண்கள் மாறாதிருப்பதுடன் பெருகவும் செய்யும்.
இரண்டாவது காரணம் நீரிழிவு நோய் காரணமாக காலிலுள்ள இரத்தக் குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய இரத்தம் பாய்ச்சப்படுவதில்லை. எனவே காயம் அல்லது புண் உண்டாகும் போது அவற்றிக்கு போதிய இரத்தம் கிடைக்காது, இதனால் திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் புண்கள் ஆறுவதற்கும் தேவையான ஒட்சிசன் கிடைக்காது போய்விடுகிறது.
மூன்றாவது காரணம் விரைவில் கிருமிகள் தொற்றுவதாகும். முதல் கூறிய இரண்டு காரணங்களாலும் நீரிழிவு நோயாளர்களுக்கு புண்களில் கிருமி தொற்றுவதும், பெருகுவதும் அதிகம். இதனால் புண்கள் விரைவில் ஆறுவதில்லை. எனவே நீரிழிவு நோயுள்ளவர்கள் தமது இரத்த சர்க்கரையின்; அளவை ஆரம்பம் முதல் எப்பொழுதும் சரியான அளவில் பேணுவது அவசியம். அதனால் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதும் அவற்றை இலகுவாக குணமாக்குவதும் சாத்தியமாகும்.
ஆனால் நாட்பட்ட புண்கள் ஏற்பட்ட பின்தான் நீரிழிவைக் கட்டுப்படுத்த முயல்வதாவது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதுதான்.

சா.முன், சா.பின் - நீரிழிவு மாத்திரைகள்

போன வாரம் எனது கிளினிக்கிற்கு ஒருவர் வந்தார்.அவர் சொன்ன விசயத்தைக் கேட்டு நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன்.
இவர் ஒரு மருத்துவரிடம் சென்றபோது மருந்துகள் உறையில் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.அதில் மருந்துகள் தினமும் எத்தனை தடவை போட வேண்டும், ஒரு வேளைக்கு எத்தனை மாத்திரைகள் போன்ற குறிப்புகள் இருந்திருக்கின்றன.
அந்த குறிப்புத்தான் இவரை அசர வைத்திருக்கிறது.
அது வேறொன்றுமில்லை! சா.முன் மற்றும் சா.பின் என்பதுதான் அது.
"சாமுன் மருந்துகளைச் சாப்பிடலாம், ஆனால் சாவின் பின் எப்படிச் சாப்பிடுவது" என்று மருத்துவரைக் கேட்டாராம்.
இதைக் கேட்ட டாக்டருக்கு  மயக்கம் வந்தாலும் வந்திருக்கும்.
சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்கு பின் என்பதை மருத்துவமனை உதவியாளர் சுருக்கமாக சா.முன், சா.பின் என எழுதியதால் வந்த வினை இது.
இப்பொழுது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள். எல்லோருமே மருந்துகள் சாப்பிடுகிறார்கள். பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள்.அவற்றைச் சா.முன், சா.பின் !!!  சாப்பாட்டுவதா என்ற சந்தேகம்.பல மருத்துவர்கள் இது பற்றி எதுவுமே தங்கள் நோயாளிகளுக்குத் தெளிவாகச் சொல்லாததால் பலரும் சாப்பாட்டிற்கு பின்தான் எடுக்கிறார்கள்.சா பின் அல்ல!!
நீரிழிவு மாத்திரைகள் இரண்டு முக்கியமான முறைகளில் செயற்படுகின்றன.
 கணையத்தைத் தூண்டி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்து அதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கொஸ் அளவைக் கட்டுப்படுத்துவன.
 மேலும் அதிகமாக இன்சுலினை சுரக்கச் செய்யாது, ஏற்கனவே உள்ளதை கூடிய வினைத்திறனுடன் செயற்படச் செய்வது.
சாப்பாடிற்கு முன் மாத்திரை சாப்பிட வேண்டியது எதற்காக?
முதலாவது வகையான, இன்சுலினைக் கூடியளவு சுரக்கச் செய்யும் நீரிழிவு மாத்திரைகளை சாப்பாட்டிற்கு முன்னர் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் உணவானது உண்டதும் செரிமானமடைந்து, உணவுக் குழாயால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன.
அவ்வாறு அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இன்சுலின் அதிகளவில் தேவை. எனவே இன்சுலினைக் கூடுதலாகச் சுரக்கச் செய்யும் மாத்திரைகளை உணவுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னராகவே உட்கொண்டால், உணவின் பின் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவைச் சரிசெய்யத் தயார் நிலையில் இருக்கும்.
ஆயினும் இவற்றை உணவுக்கு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) முன்பாக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் இரத்ததில் குளுக்கோஸ் குறைந்து களைப்பு, தலைச் சுற்று, வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் எடுப்பதே நல்லது. சல்பனையில்யூரியா வகை போன்ற மருந்துகள் இந்த ரகத்தில் அடங்கும்.
சாப்பாடிற்கு பின் மாத்திரை சாப்பிட வேண்டியது எதற்காக?
இரண்டாவது வகையானவை இன்சுலின் சுரக்கச் செய்வதை அதிகரிக்காது அதன் செயற்திறனை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துபவை. இதில் மெட்போமின் மற்றும் தயசொலினிடயோன்ஸ் என இருவகை மருந்துகள் அடங்கும்.
பெரும்பாலான நோயாளிகள் உபயோகிப்பது மெட்போமின் மாத்திரை  ஆகும். இது குருதியில் உள்ள குளுக்கோசை கலங்களுக்கள் கூடிய திறனுடன் உட்செலுத்துவதன் மூலம் குருதியின் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றது.
அதேபோல தயசொலினிடயோன்ஸ் நோயாளிகளின் உடலின் இன்சுலின் எதிர்ப்பை முறியடித்து, இன்சுலினை கூடிய வினைத்திறனுடன் செயற்பட வைக்கும். அத்துடன் ஈரலில் இருந்து குளுக்கோஸ் வெளியேறுவதையும் தடுக்கிறது.
இந்த வகை மருந்துகள்;, இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்யாது. இதனால் இரத்தில் குளுக்கோஸ் அளவை சரியான அளவிற்குக் கீழ் குறைக்காது. எனவே இவற்றை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு போன்ற விளைவுகள் வராமல் தடுக்கும் வண்ணம் உணவுக்கப் பின்னர் எடுப்பது நல்லது
சாப்பாடுடன் மாத்திரை சாப்பிட வேண்டியது எதற்காக?
இதனைத் தவிர அக்கர்பொஸ்  மற்றொரு வகை நீரிழிவு மாத்திரை உண்டு. இது நாம் உண்ணும் உணவில் உள்ள காபோஹைரேட் அதாவது மாவுப்பொருள் பதார்த்தங்கள் செரிமானம் அடைவதைக் குறைத்து அதன் மூலம் இரத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.
உணவுச் சமிபாட்டுடன் தொடர்புடைய மருந்து ஆதலால் இதனை உணவு உட்கொள்ளும் அதே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். முதல் வாய் உணவுடன் சப்பிச் சாப்பிடுவது சிறந்தது. சப்பிச் சாப்பிடப் பிடிக்கவில்pலை என்றால் சாப்பிட ஆரம்பிக்கும்போது சிறிதளவு நீருடன் விழுங்க வேண்டும்.
சா.முன், சா.பின் வி~யம் இப்பொழுது உங்களுக்கும் தெளிவாகியிருக்கும் என நம்புகிறேன். சா.முன், சா.பின் என்பதை உ.முன், உ.பின் (உணவின் முன், உணவின் பின்) என எழுதினால் பிரச்சனை ஏற்படாது என நீங்கள் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

Tuesday, November 16, 2010

நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு


நீரிழிவு நோய் எனப்படும் சக்கரை வியாதியால் அவதிப்படும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் இந்நோய்யின் தாக்கம் மருந்து மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்தப் படுகிறது. எனினும் பூரணகுணம் அடைவது அரிதாகவே உள்ளது. நீரிழிவு வியாதியை கட்டுபடுத்தாத நிலையில் தொடர்ந்து இருக்க நேர்ந்தால் அதனால் ஏற்படும் பக்க அல்லது பின் விளைவுகளில் முக்கியமானது நரம்புகள் பாதிக்கப்படுவதாகும்.
   நரம்புகள் பாதிக்கப்பட்டால் அதனால் மேலும் பல முக்கியமான உடலின் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நம் உடலில் தொடு உணர்ச்சி, வலி உணர்ச்சி, உடல் அசைவு, நடமாட்டம், உணவு ஜீரணம், பாலியல் செயல்பாடு போன்றவற்றுக்கு தேவையான அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாகின்றன. பெரும்பாலும் இந்த இனிப்புநீர் வியாதி தோன்றிய பின் 10 அல்லது 15 வருடங்களுக்கு பின்புதான் இவ்வாறு நரப்புகள் பாதிக்கப்படலாம். உண்மையில் நீரிழிவு நோயால் நரம்புகளின் பாதிப்பு சரியாக தெரியாவிட்டாலும் சில காரணங்கள் யூகிக்கப்படுகின்றன.
  நரம்புகளின் மூலமாக தகவல் சமிக்ஞைகள் செல்கின்றன. இதை செயல்படுத்துவது சில இரசாயன மாற்றங்கள். உயர்ந்த இனிப்பு இதன் சம நிலையை பாதித்து செயல் இழக்கச் செய்யலாம். உயர்வான இனிப்பு இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டு பண்ணி விடுவதால் நரம்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைவுபடுகிறது. இதனால் நரம்புகளுக்கு தேவையான பிராணவாயு குறைவுபடுகிறது. அதோடு நரம்புகளை சுற்றியுள்ள சுவர் பகுதியையும், இனிப்பு பாதித்து கெடுக்கலாம். இந்த நீரழிவுநோய் இதர பகுதிகளில் உள்ள நரம்புகளையும் பாதிப்படைய செய்யும். ஆனால் இதில் ஓர் வினோதம் என்னவேற்றால் இந்த நோய் மூளையை அல்லது நரம்பு மண்டலத்தை தாக்குவதில்லை. அப்படி மற்றும் நேர்ந்தால் வீபரிதம்தான்.
  இந்த நரம்புகள்தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் மின்சார சமிக்ஞைகளை, சிக்கலான கம்பிவலை போல் பரவியுள்ளன. நீரழிவு நோயால் இந்த 'தொலைத்தொடர்பு' வேகம் குறையலாம். செய்தி தவறாகலாம் அல்லது தடைப்படலாம். இவ்வாறு நரம்புகள் கெடுவதை நரம்பு அழற்சி என்றும் கூறுவர். இது மூன்று வகைப்படும்: பலநரம்புகள் கோளாறு, குவிமைய நரம்பு கோளாறு, தன்னியக்க நரம்புக் கோளாறு எனப்படும். இவற்றை விரிவாகப் பார்த்தால் ஒவ்வொன்றும் வௌ;வேறு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பலநரம்புகள் கோளாறு(Pழடல நேரசழியவால):  உடலின் எல்லாப் பகுதி நரம்புகளையும் இது பாதிக்கலாம். ஆனால் முக்கியமாக கைகளிலும். கால்களிலும் உள்ள பெரிய நீண்ட நரம்புகளைத்தான் கடுமையாகத் தாக்குகிறது. அதிலும் கால்களின் அடிப்பகுதியையும் ஒரேமாதிரி இரண்டு கால்களையும் பாதிக்கும். இதில் கால் அசைவு, நடப்பது போன்றவை பாதிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக உணர்வு குன்றிப்போதல், வலி மதமதப்பு, கூசுதல், ஊசுயுஆPளு என்ற தசைச்சுழுக்கு, போன்றவை காணப்படும்.
குவிமைய நரம்புக்கோளாறு(குழஉயட நேரசழியவால): இதில் ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்படலாம்.  அல்லது சில நரம்புகள் பாதிக்கப்படலாம். உடலின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படும். ஒற்றைவகையில் பாதிப்பு கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறும், ஆனால் இந்த வகை தாக்குதல் திடிரென்று ஏற்படும். இதிலும் மதமதப்பு, வலி, பலகீனம் உண்டாகும். இதுவும் எப்பகுதியிலும் ஏற்படலாம். அதாவது முகத்தில் கூட ஏற்படலாம். முகத்தில் கன்னப் பகுதியின் தசைகள் பாதிக்கப்பட்டால் அப்பகுதி செயலற்றும் மறுபக்கம் இழுத்துக் கொண்டும் காணப்படும். இதனால் முக அமைப்பு கோணாலாகும். இவ்வாறு கண் நரம்புகள், கை நரம்புகளும் பாதிக்கப்படும்.
தன்னியக்க நரம்புக்கோளாறு(யுரவழழெஅiஉ நேரசழியவால): இந்த நரம்புகள் நாம் எண்ணிப் பார்க்காத வகையில் தாமே செயல்பட்டு வரும்.  இவை உறுப்புகளை கட்டுப்படுத்துபவை. இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் இவ்வாறு தாக்கப்பட்டால், இந்த உறுப்பு செயலற்றுப் போவதால் நமது கவன்மெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.
   பல நரம்புக்கோளாறு, குவிமைய நரம்புக்கோளாறு எப்படி ஏற்படுவது என்பது முந்திய தொடரில் பார்த்தோம். அடுத்தாக தன்னியக்க நரம்புக் கோளாறு பற்றி அறிவோம். என்னவெனில் தாமாக இயங்கும் தன்னியக்க நரம்புகள், நாம் எண்னிப்பாக்காத வகையில் தாமே செயல் பட்டு வரும் உறுப்புக்ளை கட்டுப்படுத்துபவை.
இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் நீரழிவால் தாக்கப்படும் போது, இந்த உறுப்புகள் செயலற்றுப் போவதால் நமது கவனமெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.
தன்னியக்க நரம்புக் கோளாறு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்:
இருதயம், இருதயத்துடிப்பில் மாற்றம் எழுந்து நின்றால் இரத்த அழுத்தம் குறைவு.
இருதய நரம்புகள் இறந்து போனால் மாரடைப்பின் வலி தெரியாமற் போகலாம்.
வயிறு, குடல், நரம்புகள் கெடுவதால் ஜீரணம் தடைப்பட்டு அதனால் குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசியின்மை போன்றவை தோன்றுதல்.
சிறுநீர்ப்பை சரியாக இயங்காமல் எப்போது அது நிறைகிறது என்று தெரியாமல் போகலாம்,  சிறுநீரும் முழுதாக வெளியேறாத நிலையும்  ஏற்படலாம்.
இதனால் நோய்க்கிருமிகள் தொற்று உண்டாகி சிறு நீரகம் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
இனிப்பு அதிகம் குறைந்து போனால் அதன் அறிகுறிகளான வியர்வை, நடுக்கம், பரபரப்பு, கண் மங்கிப்போய் தெரியாமல் போதல், அளவுக்கு அதிகமான வியர்வை.
இப்படி பலவிதத்தில் இனிப்பு நீர் வியாதி நரம்புகளை தாக்குகின்றன. மனிதர்க்கு நரம்புகள் பாதிப்பு ஏற்படாத வகையில் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் எல்லாவிதமான நடவடிக்கை களையும் துரிதமாக எடுக்க வேண்டும். அதாவது மருத்துவரை அனுகி சிகிச்சை பெறுவது நல்லது.
நரம்புகளின் பாதிப்பு சில அறிகுறிகள் மூலமாக தென்படும். அதில் குறிப்பாக கைகள், கால்கள், பாதங்கள் கூசுதலோடு மதமதப்பாகவும், எரிச்சலுடனும், வலி குத்தலுடனும் காணப்படும். தொடு உண்ர்ச்சி மிகுந்து காணப்படும். இரவில் கால்களில் தசைச்சுளுக்கு உண்டாதல். பாதங்கள், கால்விரல்கள் தரையில் படுவது சரிவர தெரியாது போதல். பாதங்களின் தோல்தடிப்பாதல் புண்கள் வந்து மாறாது இருத்தல். இப்படிபல அறிகுறிகள் காணப்படும் உடனே மருத்துவரை அனுகுவது நன்மையாகும்.
துவக்க காலத்திலே வைத்தியம் செய்து, மருந்து மாத்திரை அல்லது ஊசி மூலம் கட்டுப்படுத்திக் கொள்வது நலம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் உண்ணும் உணவில் இனிப்பின் அளவைக் குறைத்து, மாப்பொருள், கொழுப்பு, இனிப்பு பண்டங்கள் இதனையும் தவிர்த்து, தானியங்கள், பழங்கள், கீரைவகைகள் இவற்றை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுதல், இனிப்பு நீர் என்ற சக்கரை வியாதி அதாவது நீரிழிவு நோய் தாக்கத்தில் இருந்து எம் உடலை பாதுகாத்து நீண்ட நாள் உயிர் வாழலாம்.

யாருக்குப் பரிசோதனை அவசியம்?

உங்களுக்கு வயது 45ற்கு மேல் என்பதுடன் உங்கள் எடையும் அதீதமானது எனில்  உடனடியாகச் செய்து பார்ப்பது அவசியம். எடை சரியான அளவில் இருந்தால் கூட அடுத்த முறை மருத்துரிடம் செல்லும்போது எடையைப் பற்றிக் கலந்தாலோசியுங்கள்.இன்று பலரது எடைகளும் அதீதமாக அதிகரித்து வருகிகறது.இதன் காரணமாக  எடை அதீதமாக உள்ளவர்களுக்கு பிரஸர், குருதியில் அதிகரித்த கொலஸ்டரால், அதிகரித்த ரைகிளிசரைட்  அளவு, போன்றவை இருந்தால் 45 வயது வiர் காத்திருக்காது சந்தேகம் ஏற்படும் போது மருத்துவர்கள் நாட வேண்டும்.
இதைத் தவிர தமது பரம்பரையில் நீரிழுவு உள்ளோர், கர்ப்பமாயிருக்கும்போது நீரிழிவு வந்த பெண்கள் ஆகியோர் காலம் தாழ்த்தாமல் சர்க்கரை நோய்க்கான மருத்துவரை நாடுவது நல்லது.

எப்படித் தடுப்பது?


உங்களுக்கு நீரிழிவின் முன்நிலை இருக்குமாயின் அது நீரிழிவு நோயாக மாறாமல் தடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.
• வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் குருதியில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது
• மருந்துகள் உட்கொள்வதன் மூலம் செய்வது.

வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன எவை?


 உணவு முறையில் மாற்றங்கள் செய்தல்,
 எடையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல்.
அது முடியாவிட்டால் குறைந்தது தமது எடையில் 5முதல் 10 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்தல். தினசரி முடியாவிட்டால் கிழமையில் 5 நாட்களுக்காவது 30நிமிடம் செய்ய வேண்டும். துரித நடைப் பயிற்சி நல்லதாகும்.
இவற்றை ஒழுங்காகக் கைக்கொண்டால் அவருக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு 43 சதவிகிதத்தினால் குறைகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதில் முக்கியமான வி~யம் என்னவெனில், வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடிக்கின்ற காலம் வரைதான் நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என்பதில்லை. அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட அது நீடிக்கிறது.
உதாரணமாக இந்த ஆய்வு ஏழு வருடங்களுக்குச் செய்யப்பட்டது. வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடித்த அந்த நான்கு வருடங்களுக்கு மட்டுமல்ல அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட மேலும் 3 வருடங்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு குறைந்திருந்தது என்பது நம்பிக்கை அளிக்கும் முடிவாகும்.
வாழ்க்கை முறை மாற்றங்களைச் செயற்படுத்த முடியாதவர்களுக்கும் அவற்றை ஓரளவு கடைப்பிடித்தும் குருதியில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியாதவர்களுக்கும் மருந்துகள் உதவக்கூடும்.
சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!
சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.
சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.
1. கால்கள்: சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.
2. சிறுநீரகம்:சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு,சிராய்ப்பு போன்ற சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.
3. வயிறு,குடல்: அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.
4. மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.
5. பல்,ஈறுகள்:பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.
6. கண்கள்:கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.
7. காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.
இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான்.சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.
தொற்றுக்களை தடுக்க:
1. சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
2. ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.
3. ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.
4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி
5. தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.
6. தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.
7. வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.
8. சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.
9. சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
10. வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
11. சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.
12. பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.
13. கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
14. மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

அரிசி சாதம் சாப்பிடுவதனால் சர்க்கரை நோய் வருமா?


அரிசி சாதம் சாப்பிடுவதனால் மட்டுமே ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிடுவதில்லை. அன்றாட உணவில் அரிசியோடு கூட கேழ்வரகு போன்ற மற்ற தானிய வகைகளும், பச்சை காய்கறிகளும் சம அளவு இருந்த நிலைமை மாறி, சராசரியாக ஒருவர் சாப்பிடும் அன்றாட உணவில் அரிசியின் அளவு மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமாகி விட்ட சமச்சீரற்ற உணவுப்பழக்கம் நீரிழிவு நோயை தூண்டும் காரணியாக அமையும்
இப்படியாக வாழ்க்கை தேவை, போக்குவரத்து ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களில் இந்தியர்களின் உடல் உழைப்பின் அளவு திடீரென குறைந்து விட்ட அதேசமயம், அவர்களின் அன்றாட உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமற்ற மாற்றமும் கூட நீரிழிவு நோயை அதிகப்படுத்தும் காரணியாக உருவாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதாவது இந்தியர்களின் மரபு வழி உணவில் அரிசியுடன் கூட கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளும், பல் வேறு வகையான பருப்பு வகைகளும், கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் அளவும் திடீரென குறைந்து, சராசரியாக இந்தி யர்கள் சாப்பிடும் தினசரி உணவில், அரிசி சாதத்தின் அளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக மாறியிருப்பதாகவும், இது நீரிழிவு நோயை தூண்டும் முக்கிய காரணியாக இருப்பதாகவும் மருத் துவர்கள் கருதுகிறார்கள். மேலும், பீட்சா பர்கர் போன்ற சர்க் கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளின் அளவும் இந்த பிரச்சினையை அதிகப்படுத்துவ தாகவும் பார்க்கப்படுகிறது.
இறுதியாக இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறு வயது முதலே அதிகரித்துவரும் மன அழுத்தமும் நீரிழிவு நோயை தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோய்-ஒரு வாழ்முறை சார்ந்த ஒரு நோய்.


நீரிழிவு நோய் என்பது அடிப்படையில் வாழ்முறை சார்ந்த ஒரு நோய் என்பதால், இந்தியர்களின் வாழ்முறையில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள், நீரிழிவு நோயை பெருமளவில் தூண்டிவிட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார் கள்.
அதாவது விஞ்ஞான முன்னேற்றத்தால் உருவான தொழில் வளர்ச்சி, மற்றும் அது ஏற்படுத்திய பல்வேறு வசதி வாய்ப் புகள் காரணமாக இந்தியர்களின் உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் உடலின் இன்சுலின் சுரக்கும் தன்மை குறைந்து, நீரிழிவு நோய் என்பது இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியாக உருவாகி யிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக, கிராமம் சார்ந்த, விவசாய பொருளாதாரத்தை நம்பி யிருந்த இந்தியர்கள், நகர்மயமான அலுவலகம் சார் வாழ்க்கை முறைக்கு மாறியிருப்பது அவர்களின் அன்றாட உடல் உழைப் பின் அளவை வெகுவாக குறைத்ததாக பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, இந்தியாவில் கிராமங்கள் வரை எட்டியுள்ள சாலை வசதிகள், அதனால் அதிகரித்திருக்கும் வாகன போக்கு வரத்துக்கான வாய்ப்புகள் என்பவை இந்தியர்களின் நாளாந்த நடையின் அளவையும் குறைத்து விட்டதாக கணிக்கப் படுகிறது.
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கும் மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோகப்பொருட்களின் பயன்பாடு காரணமாக, பெண்களின் மரபுசார் உடல் உழைப்பும் குறைந்து விட்டிருக்கிறது.

ஆரம்பகால சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியும் என்கிறார்களே அது உண்மையா? எப்படி கட்டுப்படுத்துவது?


 ‘‘ஆம். ஆரம்பகால சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியும் என்பது உண்மைதான்.
இதற்கு ப்ரீ டயாபடீஸ் அல்லது பார்டர் லைன் டயாபடீஸ் என்று பெயர். இதை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டு செயல்பட்டால் குணப்படுத்திவிடலாம். எப்படி தெரிந்து கொண்டு குணப்படுத்த முடியும் என்கிறீர்களா?
குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, வெறும் வயிற்றில் இருக்கும் போது உங்களின் இரத்த சர்க்கரை அளவு 100க்கு மேல் 125 க்கு கீழ் இருக்க வேண்டும். 125க்கு மேல் இருந்தால் முழுமையான சர்க்கரை வியாதி என்றும் 100 க்கு மேல் இருந்தால் ஆரம்ப கால சர்க்கரை வியாதி என்றும் தெரிந்துகொள்ளலாம்.
இது ஐகுபு முறை. அதுவே ஐபுவு முறை என்றால் குளுக்கோஸ் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சர்க்கரையின் அளவு 140 மேல் 200 கீழ் என வரையறுத்துக் கொண்டால், 200  மேல் இருந்தால் முழுமையான சர்க்கரை வியாதி இருக்கிறது என்றும் 140 க்கு மேல் இருந்தால் ஆரம்ப நிலை சர்க்கரை வியாதி என்றும் புரிந்து கொள்ளலாம்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆரம்பநிலை சர்க்கரை வியாதியை உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைகுறைத்தல், அதி நவீன மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் குணப்படுத்திவிட முடியும். ஆனால், முழுமையான சர்க்கரைவியாதியை குணப்படுத்தமுடியாது. கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக பரம்பரைத் தன்மை, உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்யாதது. உடல் பருமன், மன உளைச்சல், தூக்கமின்மை, ஆகியவற்றால்தான் ஆரம்பநிலை சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. மேலும் ஆரம்ப நிலைதானே என்று சாதாரணமாக எண்ணவேண்டாம். ஏனெனில், இதன் மூலம் இதயபாதிப்புகளால் நரம்பு, கண் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா?


சர்க்கரை நோய் என்றதும், ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை
அதேசமயம், அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருக்கறது.
  உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை. அதேசமயம், ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக்காரணிகளும் ஏற்கெனவே அதிகமாக இருக்கும் பின்னணியில், அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிட்டால், அதனால் அவரது உடல் எடை அதிகரித்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும்
அடுத்ததாக, சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல் லையா என்பதை தெரிந்துகொள்வதற்கு பொதுவான அறிகுறி கள் சில இருக்கின்றன. அதிக தாகம், அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த் துவதாக கருதப்படுகின்றன.
இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவர்கள் அவசியம் நீரிழிவுநோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்துகொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் இத்தகைய அறிகுறிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை. நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம்.
இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க் கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்க ளில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதை போக்க வேண்டுமானால், நீரிழிவுநோயை ஆரம்ப நிலையி லேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.
இதன் ஒருபகுதியாக, பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது அவர்கள் கண்டிப்பாக நீரிழிவுநோய் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது.
அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு, மற்றும் அவரது பெற்றோ ருக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக்கொள்ள முடியும் என்கிறார் மோகன்.
யார் வேண்டுமானாலும் இந்த வழிமுறையின் மூலம், தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியப்பாடு இருக்கிறதா என்பதை சுமார் 80 சதவீதம் சரியாக கணிக்க முடியும்.
இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப்படுத்துவதும் எளிது. நீரிழிவுநோய் உண்டாக்ககூடிய இதர உடல்நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்

எப்படி தெரிந்துக் கொள்வது?

சக்கரை வியாதி எவ்வளவு சாதாரணமாகிவிட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை அது பார்ப்பதில்லை! ஒவ்வொரு 10 வினாடியிலும் ஒரு புதிய சக்கரை நோயாளி கண்டு பிடிக்கப்படுகிறார் என்பது ஒரு அதிர்ச்சியான உண்மை!! சக்கரை நோயாளிகள் உடலில் சக்கரையின் அளவு 24 மணி நேரமும் சீராக இருக்க வேண்டும்!! ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியவில்லை!! இதனால் சக்கரையின் அளவானது உடலில் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். குறிப்பாக மதிய உணவு உண்டவுடன்!! ஏனென்றால் நம் உணவு முறையில் மதிய உணவில் கலோரிகள் அதிகம்! அப்படியானால் என் ரத்தத்தில் எவ்வளவு சக்கரை கடந்த சில மாதங்களாக இருந்தது? என்ற கேள்வி எழும்!! அதனைத் தெரிந்து கொண்டால் நிச்சயம் நமது உடலில் சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து கொள்ளலாம்!! அப்படி ஒரு சோதனை இருக்கிறதா? என்று கேட்டால் ஆம் உள்ளது என்பதுதான் பதில்!! அந்த சோதனையின் பெயர் என்ன? அந்த சோதனையின் பெயர் ர்டி யு1உ இந்த சோதனையின் மூலம் கடந்த இரண்டிலிருந்து மூன்று மாதங்களாக ரத்தத்தில் சக்கரை இருந்தது என்று அறியலாம்.
இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள்வரை! இவை இரத்தத்தில் இருந்தபோது அவற்றின் உடல் மீது இரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரை ஒட்டி இருக்கும். அதிகம் சக்கரை இருந்தால்அதிகமாகவும் குறைய சக்கரை இருந்தால் குறைவாகவும் ஒட்டி இருக்கும்! இதனை அளந்தால் சக்கரை நம் ரத்தத்தில் நான் சொன்னபடி கடந்த மூன்று மாதமாக எவ்வளவு இருந்தது என்று அறியலாம்!
இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
1. ஏழு அல்லது 7க்குக்கீழ்- சக்கரை அளவு மிகச்சரியாக உள்ளது.
2. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் - 7மூ-8மூ- பரவாயில்லை. 7க்கு குறைக்க வேண்டும்!
3.எட்டுக்கும் 10க்கும் இடையில்-இரத்தத்தில் சக்கரை மிக அதிகம்!
4.பத்துக்கு மேல்-,10மூ - உங்கள் சக்கரை அளவு மிக மிக அதிகம்!! ஆகையினால் சக்கரை நோயாளிகள் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது என நம்பிக்கை கொண்டேர்ரும் இந்த சோதனையை செய்து கொள்ளலாம்!!!

அடுத்து மிக முக்கியமான காரணி நாம் உண்ணும் உணவு முறை


அதிக கலோரிகள் உள்ள உணவை உண்ணும் சமூகத்தில் நீரிழிவு நோய் பரவலாகக் காணப்படுகிறது.
கலோரிகள் குறைந்த எளிய உணவையே எப்போதும் உட்கொள்பவர்களுக்கு இந்நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகளிலும், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உணவுத் தட்டுப்பாடு இருந்ததால் எளிய உணவையே மக்கள் உண்டு வந்தனர். இந்தக் கால கட்டத்தில் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்ததாம்!
கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது.
மன அழுத்தம்
மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.
மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு இயக்க நீர் மாற்றங்கள் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருதய நோய்கள், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கும் கூட மன அழுத்தமே முக்கியமான காரணமாக அமைகிறது.
மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பார்கள். முக்கியமாக சாக்லேட், சிப்ஸ் போன்றவை. இதனால் உடல் எடை அதிகமாவதும் நீரிழிவு நோய்க்கு ஒரு காரணமாகிறது.
உடல் உழைப்பு இல்லாமை.
ஓடியாடி உழைப்பவர்களுக்கு நீரிழிவு நோய் அதிகம் வருவதில்லை.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வருகிறது.
போதைப் பொருட்கள்
புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
பாரம்பரியம்
நீரிழிவு நோய் முழுக்க முழுக்க ஒரு பரம்பரை நோய் என்பது இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் பரம்பரையில் எவருக்கேனும் இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு கணிசமாக உயர்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
யார், யாருக்கு சர்;க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்? சுருக்கமாகச் சொல்கிறேன்.
பரம்பரையில் இந்நோய் உள்ளவர்களுக்கு
உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு
ஆண்களை விட பெண்களுக்கு
இளைஞர்களை விட முதியவர்களுக்கு
ஆண்களில் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு
பெண்களில் கல்யாணம் ஆகி குழந்தை உள்ளவர்களுக்கு
அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு
எடை அதிகமான குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு
மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு
போதைப் பொருட்களுக்கு அடிமை யானவர்களுக்கு.

யார், யாருக்கு வரும்?


இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோய் வரலாம்.
ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் வயது அடிப்படையில் பார்ப்போமா?
ஒரு குழந்தைக்கு அல்லது இளவயதினருக்கு வருவதை விட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
அமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு உள்ளதாகத் தெரிகிறது.
வயது வருடங்களில் பத்தாயிரம் பேரில் நீரிழிவு உள்ளவர்கள்
1  முதல்  20  வயது வரை 4 சதவிகிதம்.
20 முதல்  40  வயது வரை 10 சதவிகிதம்.
50 முதல்  60  வயது வரை 100 சதவிகிதம்.
60 முதல்  70  வயது வரை 1000 சதவிகிதம்.
இந்த விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாலினம் அடிப்படையில்..
இளவயது நீரிழிவு நோய் (முதல் வகை) ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது.
முதிர்வயது நீரிழிவு (இரண்டாவது வகை) ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.
பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது நீரிழிவு வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
45 முதல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்களை இந்த நோய் தாக்குகிறது.
திருமணம் கூட ஒரு விளைவுதான்..
ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே காலத்தை ஓட்டும் ஆண்களுக்கு நீரிழிவு நோய் அதிகமாக வருகிறது. விவாகரத்து செய்து கொண்ட அல்லது குடும்பத்தை விட்டு விலகி தனியே வாழும் ஆணுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருவதாகத் தெரிகிறது.
பெண்களில் இதற்கு நேர் எதிர்மறையான நிலை காணப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாத அல்லது விவாகரத்து செய்து கொண்ட, குழந்தைகள் இல்லாத பெண்களுக்கு இந்த நோய் அதிகம் வருவதில்லை.திருமணமான பெண்களுக்கே அதிகம் வரும்.
பிரசவ காலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு நோய் தோன்றுகிறது.
ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு நீரிழிவு நோய் குறைவாகவும், பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.!
கருவுறும் காலத்தில் உடலில் ஏற்படும் இயக்க நீர் மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கருவுறும் போது, அல்லது பிரசவத்திற்குப் பின் பெரும்பாலான பெண்களின் எடை அதிகமாகிவிடுகிறது. நீரிழிவு அதிகம் வர இதுவும் ஒரு காரணம்.
பரம்பரையில் எவருக்கும் நீரிழிவு இல்லாதிருந்தாலும் கூட, 6 குழந்தைகள் அதற்கு மேலும் பெறும் பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் பெரும்பாலும் நீரிழிவு வந்து விடுகிறது.
அதிக எடையுள்ள குழந்தைகளைப் பெறும் தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு 15சதவிகிதம் அதிகம் எனவும் தெரிகிறது.
பிறக்கும் போது குழந்தையின் எடை 4.5 கிலோவுக்கு மேல் இருந்தால், அந்தத் தாய்க்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

Tuesday, October 5, 2010

உணவுக் கட்டுப்பாடு அவசியமா?

நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரசினையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம். நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதன் விளைவாகத் தோன்றும் சிக்கல்களே மிகக் கடுமையானவை. குறிப்பாகக் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் பெருமளவுக்குக் கட்டுப்பாடற்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவினால் வரும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உணவு உண்ணும் முறைகளை மிக இயல்பான வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ என்பதன் உண்மையான பொருள்.

நீரிழிவு உணவுக் கட்டுப்பாடு என்பது, சத்துள்ள உணவு, சரியான அளவு, சரியான நேரத்திற்கு உட்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோய்க்குரிய உணவு முறை மிகவும் ஆரோக்கியமானதாகும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் இவ்வுணவு முறை மற்றும் சமையல் செய்யும் முறை மூலம் பயன் உண்டாகும்.

அரிசி உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று ஒரு தவறான கருத்து, நீரிழிவுக்காரர்களிடம் நிலவி வருகிறது. அரிசி, கோதுமை, ராகி, பாஜ்ரா போன்ற தானியங்களில் 70_75% கார்போ ஹைட்ரேட் அடங்கியிருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட உணவை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பல நீரிழிவு நோயாளிகள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால், அது உணவு பரிந்துரையாளர் (Dietician) கொடுக்கப்பட்டுள்ள உணவின் அளவுப்படி, உணவு உட்கொள்ளும் பொழுது, துல்லியமாக அளந்து சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று என்பதுதான். ஆனால், நீங்கள் உணவை அளந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தினசரி உட்கொள்ளும் அளவை விட, குறைவாகச் சாப்பிட்டால் போதும்.

உணவு உட்கொள்ளும் பொழுது வயிறு நிறைய உணவு உண்ணுதல் தவறு. அதற்குப் பதிலாக, மூன்றில் ஒரு பங்கு உணவும், மற்றொரு பங்கு தண்ணீரும், மற்றொரு பங்கு வயிற்றைக் காலியாக வைப்பதும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் திட்டமிட்ட அளவான, சமநிலையான சத்து அடங்கிய உணவை மற்றவர்களைப் போல உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீரிழிவு உள்ளவர்கள் அவர்களின் தினசரி உணவு முறையில் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள கோதுமை, அரிசி, ராகி மற்றும் பல தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் சத்துள்ள தானியங்கள், நாற்சத்து உள்ள உணவு வகைகள், மற்றும் பல சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய் வகைகள், மற்றும் கால்ஷியம் சத்துள்ள பால், மாமிச வகைகள், வாரத்தில் இருமுறை குறைவான அளவில் எண்ணெய், இவை அனைத்தும் தினசரி உணவில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பழங்கள் உண்ணுதல் தவறு இல்லை. எனினும், ஒரு சில பழங்கள் அதாவது வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களின் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகமான அளவில் உட்கொண்டால், அவை ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை உயர்த்தக்கூடும். அதனால் ஆரஞ்சு, மோசம்பி, பப்பாளி, ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ரெட் மீட் அதாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்ற உணவு வகையில் சச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். ஆதலால் இவைகளைத் தவிர்ப்பது (அல்லது) மிகவும் அபூர்வமாக உண்ணுதல் என்பது நல்லது. சிறுநீரகம் செயலிழந்து போவதற்கு நீரிழிவு நோயே பெரும்பாலும் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் மிகவும் அவசியமானது. உணவு முறைகளில் மாற்றங்கள் என்று பார்க்கும்போது, புரோட்டீன் சத்தைக் குறைப்பது என்பது சிறுநீரகப் பிரசிசனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்றால் உப்பு. அதாவது தினமும் உட்கொள்ளும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும். 35g/per day என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் குறைத்து விட வேண்டும். பொட்டாஷியம் அதிக அளவில் உள்ள உணவு வகைகள் இளநீர், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், ரெட் மீட் (beat, pork, meat) மற்றும் சில பழங்கள் (Mango, Amla, Sapota, Lemon etc) சில காய் வகைகள், (தண்டு கீரை, பசலை கீரை, மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக் கீரை, பீன்ஸ், முருங்கைக்காய்).

நீரிழிவு நோய் உள்ளவர்களில் பலர் உணவுக் கட்டுப்பாடு பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உணவு பரிந்துரையாளரின் ஆலோசனைகளைப் பெறத் தேவையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், நோயாளிகளை அணுகி அவர்களின் உடல் பருமன், சர்க்கரையின் அளவு, கொழுப்பு மற்றும் சிறுநீரகம் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையை ஒவ்வொரு நோயாளிகளின் தேவைக்கு ஏற்றார்போல் கூறுவது உணவு பரிந்துரையாளரின் பணியாகும். இவற்றைப் பொதுவான முறையில் மட்டும் கொடுப்பது போதுமானது அன்று.

பல அறிக்கைகளைப் பார்க்கும் போது, மக்கள் சிலர் ஒரு நாளில் 2_3 சர்விங் காய்வகைகள் மற்றும் 1 சர்விங் பழங்கள் உட்கொள்பவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற பிரசினைகள் வரும் வாய்ப்பு குறைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உணவு வகைகளில் எண்ணெயின் அளவைக் குறைப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம்.

கொழுப்பு இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சச்சுரேடட் மற்றும் அண்சச்சுரேடட் என்பதாகும். சச்சுரேடட் கொழுப்பு அடங்கியுள்ள உணவு வகைகள் (நெய், வெண்ணெய், கீர், மாமிசம், முழு பால் க்ரீம்) மற்றும் பல காய் வகைகளில் உள்ள எண்ணெய்கள், (தேங்காய் எண்ணெய், பாமாயில்) ஹைடோரோஜினேட்டட் (Hydrogenated) கொழுப்பு அடங்கியுள்ள வகைகள் (வனஸ்பதி, மார்கிரேன்) இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் கெட்டியான பதத்தில் இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.

அண்சச்சுரேடட் கொழுப்பானது பாலிஅண்செச்சுரேடட் மற்றும் மேனோ அண்செச்சுரேடட் என்று பிரிக்கலாம். இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் நீர் பதத்தில் இருக்கும். இவை (சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், எள் எண்ணெய், மற்றும் ஆலிங் எண்ணை) வகைகளில் உள்ளன. மற்றும் ஆலிவ் போன்ற பருப்பு வகைகளிலும் உள்ளன.

பல விளம்பரங்களிலும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது, பாதுகாப்பானது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் எல்லாவிதமான எண்ணெய்களையும் உபயோகிக்கலாம். ஆனால், குறைந்த அளவில் உபயோகிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா விதமான எண்ணெய் வகைகள் அதிக அளவான கலோரியைக் கொண்டது. அவை சர்க்கரையை மற்றும் கொழுப்பையும் நம் உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் உபயோகிக்கும் எண்ணெயின் அளவு லு கிலோகிராம் ஆக இருக்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கலோரியன் அளவை கணக்கிடுகையில் அந்த நபரின் எடை கூடுதலாக வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது அதே எடையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து, அணுகி கலோரியின் அளவைக் குறிக்கவேண்டும்.

சரியான உடல் எடையைத் (Ideal body weight) தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. முதலில் உயரத்தை சென்டிமீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உடல் எடை = உயரம் (செ.மீ) 100 x 0.9

(Ideal body weight = Height (in cms) 100 x0.9)

சரியான உடல் எடையைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு 25kcal/kg உடல் எடை தேவைப்படும். அவர்கள் சரியான உடல் எடையைப் பராமரிக்க உதவும். சரியான உடல் எடைக்கு அதிமாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (over weight) 20 kcal/kg உடல் எடை தேவைப்படும். மற்றும் சரியான உடல் எடையை விடக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு (weight) 3035 kcal/kg உடல் எடை தேவைப்படும்.

இவ்வாறு உணவுக் கட்டுப்பாட்டில் கலோரி கன்டென்ட் எல்லா நீரிழிவு நோயாளிகளின் எடைக்கும் ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். அதனால் சரியான எடையுள்ள நபர்களாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாடு அமைக்கவேண்டும். இதனால் அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தக் குறையும் இன்றி இருக்கவேண்டும்.

தினசரி உணவு முறை திட்டத்தின்படி மொத்த கலோரிகள் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது மொத்த கலோரியில் மாவுச்சத்து 6065% புரதச்சத்து (protein) 15 to 20% மற்றும் கொழுப்புச்சத்து (Fat) 15 to 25% இப்படியாக பகிர்ந்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளை அணுகும் போது அவர்களின் உணவு முறை, மதம் (சமூகம்) வசதி, இவற்றிற்கேற்ப பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் புரியும் அளவில் மற்றும் எளிதான முறையில் கூறப்படுதல் வேண்டும்.

Thursday, August 12, 2010

நீரிழிவின் முன்நிலை என்றால் என்ன?


நீழிழிவு பற்றி எல்லோரும் அறிவர். ஆனால் நீழிழிவின் முன்நிலை பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.நீரிழிவின் முன்நிலை என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய ஆரம்ப கட்டமாகும்.

குழந்தைகள் பாடசாலைக்குப் போக ஆரம்பிப்பதற்கு முன்னர் 'முன்நிலைப் பள்ளி'க்குப் போகிறார்களே அது போன்றது. ஆரம்பப் பாடசாலை எனவும் சொல்வர். அதே போல 'நீரிழிவின் ஆரம்பநிலை' எனவும் சொல்லலாம்.

இரவு உணவு உட்கொண்டபின் காலை வரை எதுவும் உட்கொள்ளாமல் இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சர்க்கரையின்  அளவு (110 முதல் 125 வரை இருந்தால் “நீரிழிவின் முன்நிலை” எனலாம். இது 126க்கு மேல் அதிகரிக்குமாயின் அவருக்கு நீரிழிவு எனத் தெளிவாகக் குறிப்பிடலாம்.

மற்றொரு பரிசோதனையும் செய்யப்படுவதுண்டு, இதனை குளுக்கோஸ் டொலரன்ஸ் டெஸ்ட் என்பர்.

50 முதல் 75 கிராம் வரை அளவுள்ள குளுக்கோஸ் கலந்த நீரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு 2 மணிநேரத்தின் பின் குருதி குளுக்கோஸ் அளவை கணிப்பர்.



இது 140 ற்குக் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு இல்லை. 140 முதல் 199 வரை இருந்தால் அது நீரிழிவின் முன்நிலை ஆகும். 200க்கு மேல் இருந்தால் அவருக்கு நீரிழிவு இருக்கிறது என நிச்சயம் சொல்லலாம்.



நீரிழிவு நோய் என்றால் என்ன?


 நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத் தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது.இங்கு இருந்து தான் இன்சுலின் .உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடிவதில்லை.இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது.சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் மோசமான விளைவுகளுக்கு ஆளாகி விடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரை யின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்,மேலே குறிப்பிட்டுள்ள உபாதை களினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் சுயகட்டுப்பாடுடன் வாழ வேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.

நீரழிவு நோய் மூன்று வகைப்படும்

வகை - 1: டயாபிடிஸ்

வகை - 2: டாயாபிடிஸ்

வகை - 3: ஜெஸ்டே~னல் டயாபிடிக்ஸ்

வகை- 1: நீரழிவு நோய்

இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pயnஉசநயள) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.

நீரிழிவு நோயானது தாய், தந்தையினரின் வழியாகவும், நெய், பால், கள், இறைச்சி போன்ற உணவுப் பதார்த்தங்களை பயன்படுத்துவதாலும், ஈரப் பொருள்கள் மற்றும் வெறுப்பைத் தரக்கூடிய உணவுப் பொருள்களை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது.

நீரழிவு நோயின் அறிகுறிகள்:-

சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். சிறுநீருக்குரிய நிறம், நிறை, எடை, மணம் போன்றவற்றுள் நிறம் தண்ணீரைப்போலும், நிறை அளவுக்கு அதிகமாகவும், எடை கனத்தும், மணம் தேன் போன்றும் காணப்படும். சிறுநீரானது, தெளிந்த நீர் போன்று அடிக்கடி வெளியேறும். வெளியேறிய சிறு நீர்த்துளிகள் சற்று உலர்ந்தவுடன் பிசுபிசுத்துக் காணப்படும். உடல் வலிமை நாளுக்குநாள் குறைந்தும், நாவறட்சி அதிகமாகவும் காணப்படும்.

பொதுப்பண்புகள்:-

உடல் மெலிவடைந்தும், தோலில் நெய்ப்பசையற்று வறண்டு சுருங்கி வெளுத்த மஞ்சள் நிறத்தையும் அடையும். நாவறட்சி, அதிக நீர் வேட்டை, அதிகமாக பசியெடுத்தும், உணவு சாப்பிட்ட சற்று நேரத்திற்குள் மீண்டும் பசியெடுப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்நோய் முதிர்ந்து தனக்கு துணையாகப் பலவகையான கேடுகளையும் உண்டாக்கும்.உடல் சத்தை உருக்கிச் சர்க்கரையாய் நீர் வழியே வெளியேற்றும்.

சொறி, சிரங்கு, கட்டி முதலியவைகளை உருவாக்கி பல கேடுகளை உண் டாக்கும். பித்த நாடி விரைந்து நடக்கு மாயின் நீரிழிவு நோய் வரலாம்.

வகை- 1: நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல

இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.

உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

வகை- 2: நீரழிவு நோய்

இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (pசழபசநளளiஎந) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.

வகை- 2: நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்

பொதுவாக இது பரம்பரை நோய்

பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.

இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

வகை - 3: ஜெஸ்டே~னல் நீரழிவு நோய்:

கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் ஐஐ நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா?

சர்க்கரை நோய் என்றதும், ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை என்கிறார்.

அதேசமயம், அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருக்கறது.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை. அதேசமயம், ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக்காரணிகளும் ஏற்கெனவே அதிகமாக இருக்கும் பின்னணியில், அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிட்டால், அதனால் அவரது உடல் எடை அதிகரித்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும்

அடுத்ததாக, சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல் லையா என்பதை தெரிந்துகொள்வதற்கு பொதுவான அறிகுறி கள் சில இருக்கின்றன. அதிக தாகம், அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த் துவதாக கருதப்படுகின்றன.

இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவர்கள் அவசியம் நீரிழிவுநோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்துகொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் இத்தகைய அறிகுறிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை. நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம்.

இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க் கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்க ளில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதை போக்க வேண்டுமானால், நீரிழிவுநோயை ஆரம்ப நிலையி லேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.

இதன் ஒருபகுதியாக, பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது அவர்கள் கண்டிப்பாக நீரிழிவுநோய் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது.

அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு, மற்றும் அவரது பெற்றோ ருக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக்கொள்ள முடியும் என்கிறார் மோகன்.

யார் வேண்டுமானாலும் இந்த வழிமுறையின் மூலம், தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியப்பாடு இருக்கிறதா என்பதை சுமார் 80 சதவீதம் சரியாக கணிக்க முடியும்.

இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப்படுத்துவதும் எளிது. நீரிழிவுநோய் உண்டாக்ககூடிய இதர உடல்நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்



நீரிழிவு நோய் என்பது அடிப்படையில் வாழ்முறை சார்ந்த ஒரு நோய் என்பதால், இந்தியர்களின் வாழ்முறையில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள், நீரிழிவு நோயை பெருமளவில் தூண்டிவிட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார் கள்.

அதாவது விஞ்ஞான முன்னேற்றத்தால் உருவான தொழில் வளர்ச்சி, மற்றும் அது ஏற்படுத்திய பல்வேறு வசதி வாய்ப் புகள் காரணமாக இந்தியர்களின் உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் உடலின் இன்சுலின் சுரக்கும் தன்மை குறைந்து, நீரிழிவு நோய் என்பது இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியாக உருவாகி யிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக, கிராமம் சார்ந்த, விவசாய பொருளாதாரத்தை நம்பி யிருந்த இந்தியர்கள், நகர்மயமான அலுவலகம் சார் வாழ்க்கை முறைக்கு மாறியிருப்பது அவர்களின் அன்றாட உடல் உழைப் பின் அளவை வெகுவாக குறைத்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, இந்தியாவில் கிராமங்கள் வரை எட்டியுள்ள சாலை வசதிகள், அதனால் அதிகரித்திருக்கும் வாகன போக்கு வரத்துக்கான வாய்ப்புகள் என்பவை இந்தியர்களின் நாளாந்த நடையின் அளவையும் குறைத்து விட்டதாக கணிக்கப் படுகிறது.

விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கும் மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோகப்பொருட்களின் பயன்பாடு காரணமாக, பெண்களின் மரபுசார் உடல் உழைப்பும் குறைந்து விட்டிருக்கிறது.



அரிசி சாதம் சாப்பிடுவதனால் மட்டுமே ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிடுவதில்லை. அன்றாட உணவில் அரிசியோடு கூட கேழ்வரகு போன்ற மற்ற தானிய வகைகளும், பச்சை காய்கறிகளும் சம அளவு இருந்த நிலைமை மாறி, சராசரியாக ஒருவர் சாப்பிடும் அன்றாட உணவில் அரிசியின் அளவு மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமாகி விட்ட சமச்சீரற்ற உணவுப்பழக்கம் நீரிழிவு நோயை தூண்டும் காரணியாக அமையும்

இப்படியாக வாழ்க்கை தேவை, போக்குவரத்து ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களில் இந்தியர்களின் உடல் உழைப்பின் அளவு திடீரென குறைந்து விட்ட அதேசமயம், அவர்களின் அன்றாட உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமற்ற மாற்றமும் கூட நீரிழிவு நோயை அதிகப்படுத்தும் காரணியாக உருவாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதாவது இந்தியர்களின் மரபு வழி உணவில் அரிசியுடன் கூட கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளும், பல் வேறு வகையான பருப்பு வகைகளும், கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் அளவும் திடீரென குறைந்து, சராசரியாக இந்தி யர்கள் சாப்பிடும் தினசரி உணவில், அரிசி சாதத்தின் அளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக மாறியிருப்பதாகவும், இது நீரிழிவு நோயை தூண்டும் முக்கிய காரணியாக இருப்பதாகவும் மருத் துவர்கள் கருதுகிறார்கள். மேலும், பீட்சா பர்கர் போன்ற சர்க் கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளின் அளவும் இந்த பிரச்சினையை அதிகப்படுத்துவ தாகவும் பார்க்கப்படுகிறது.

இறுதியாக இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறு வயது முதலே அதிகரித்துவரும் மன அழுத்தமும் நீரிழிவு நோயை தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இனிப்பு நோயின் கசப்பு முகம்

சொல்லாமல் கொல்லும் சர்க்கரை



இனிப்பு நோயின் கசப்பு முகம்

நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ், இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக உருவாகியிருப்பதை தமிழில்  விளக்கும் வலை தளம் இது.




இன்றைக்கு உலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக இந்தியா மாறியிருக்கிறது.உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் ஏழரை கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுகிறது.

எபிடெமிக் என்கிற ஆங்கில வார்த்தையை,இதுவரை நாம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிற ஒரு தொற்றுநோயாக குறிப்பிட்டு வந்திருக்கிறோம். சர்க்கரைநோயானது தொற்றுநோயைப் போல வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்ல, சர்க்கரை நோய் என்பது குறிப்பிட்ட குடும்பங்கள், சமூகம், மக்கள் தொகையில் ஒருவிதமான தொடர் தொற்றாக உருவாகியிருப்பதையும் நாம் காண்கிறோம்.

பொதுவாகவே வசதிபடைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சர்க்கரைநோய், இன்று இந்தியாவின் கிராமப் புறங்களிலும் வேகமாக அதிகரித்துவருவதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது.
இதேவேளை, இளைய தலைமுறை இந்தியர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று கூறுகிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.

நீரிழிவு நோய் குறித்த சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை இந்தியாவில் உருவாகிவருகிறதா என்பது குறித்தும், நீரிழிவு நோய் தோற்றுவித்திருக்கும் சுகாதார பொருளாதார சிக்கல்கள் குறித்தும் இங்கே நாம் எடுத்துரைக்க போகிறோம் .

இந்தியாவில் சர்க்கரை நோயின் பொருளாதாரச் சுமை



ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால் அவர், தனது வாழ்நாள் முழுமையும் மருந்து மாத்திரைகளை சார்ந்தே உயிர் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்.

இந்த மருந்து மாத்திரைகளை சார்ந்து வாழும் நிலைமை என்பது சர்க்கரை நோயாளிகளுக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் மிகப்பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.

பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய கூடுதல் பொருளாதார சுமையை தாங்க முடியுமா என்பது பலராலும் முன்வைக்கப்படும் முக்கிய கேள்வி.

இந்திய ஏழைகள், தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவில் 80 சதவீதத்தை தமது சொந்த பணத்தில் இருந்து செலவிடுவதாக எங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு சர்க்கரைநோய் போன்ற வாழ்நாள் முழுமைக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய் வந்துவிட்டால்,அவர்களின் வருமானத்தில் கணிசமான பகுதி அந்த சிகிச்சைக்காகவே செலவிடவேண்டிய சூழல் உருவாகும்.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் கோடிக்கணக்கான ஏழைகளை நீரிழிவு நோய் என்பது மீளமுடியாத பொருளாதார படுகுழியில் தள்ளிவிடும் என்கிற அச்சங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இத்தைகைய ஏழை குடும்பங்களில் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவு என்பது, அவரையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்ல, இவரைப்போல் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தி திறனையும் அது பாதிக்கும் என்பது தான் இதில் பொதிந்திருக்கும் உள்ஆபத்து.