சர்க்கரை நோய்
Loading
Tuesday, November 16, 2010
யார், யாருக்கு வரும்?
இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோய் வரலாம்.
ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் வயது அடிப்படையில் பார்ப்போமா?
ஒரு குழந்தைக்கு அல்லது இளவயதினருக்கு வருவதை விட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
அமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு உள்ளதாகத் தெரிகிறது.
வயது வருடங்களில் பத்தாயிரம் பேரில் நீரிழிவு உள்ளவர்கள்
1 முதல் 20 வயது வரை 4 சதவிகிதம்.
20 முதல் 40 வயது வரை 10 சதவிகிதம்.
50 முதல் 60 வயது வரை 100 சதவிகிதம்.
60 முதல் 70 வயது வரை 1000 சதவிகிதம்.
இந்த விகிதாச்சாரம் இந்தியாவில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாலினம் அடிப்படையில்..
இளவயது நீரிழிவு நோய் (முதல் வகை) ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது.
முதிர்வயது நீரிழிவு (இரண்டாவது வகை) ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.
பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது நீரிழிவு வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
45 முதல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்களை இந்த நோய் தாக்குகிறது.
திருமணம் கூட ஒரு விளைவுதான்..
ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே காலத்தை ஓட்டும் ஆண்களுக்கு நீரிழிவு நோய் அதிகமாக வருகிறது. விவாகரத்து செய்து கொண்ட அல்லது குடும்பத்தை விட்டு விலகி தனியே வாழும் ஆணுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருவதாகத் தெரிகிறது.
பெண்களில் இதற்கு நேர் எதிர்மறையான நிலை காணப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாத அல்லது விவாகரத்து செய்து கொண்ட, குழந்தைகள் இல்லாத பெண்களுக்கு இந்த நோய் அதிகம் வருவதில்லை.திருமணமான பெண்களுக்கே அதிகம் வரும்.
பிரசவ காலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு நோய் தோன்றுகிறது.
ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு நீரிழிவு நோய் குறைவாகவும், பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.!
கருவுறும் காலத்தில் உடலில் ஏற்படும் இயக்க நீர் மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கருவுறும் போது, அல்லது பிரசவத்திற்குப் பின் பெரும்பாலான பெண்களின் எடை அதிகமாகிவிடுகிறது. நீரிழிவு அதிகம் வர இதுவும் ஒரு காரணம்.
பரம்பரையில் எவருக்கும் நீரிழிவு இல்லாதிருந்தாலும் கூட, 6 குழந்தைகள் அதற்கு மேலும் பெறும் பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் பெரும்பாலும் நீரிழிவு வந்து விடுகிறது.
அதிக எடையுள்ள குழந்தைகளைப் பெறும் தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு 15சதவிகிதம் அதிகம் எனவும் தெரிகிறது.
பிறக்கும் போது குழந்தையின் எடை 4.5 கிலோவுக்கு மேல் இருந்தால், அந்தத் தாய்க்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment